ரூபாய் ஒரு கோடி சம்பளம் தருவதாக பிரபல இளம் நடிகையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
Bigg Boss 4 Contestant Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் தொடங்கி உள்ளது.
அக்டோபர் 10ஆம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி யார் யார் கலந்து கொள்வார்கள் எனவும் சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இவருக்கு ரூபாய் ஒரு கோடி சம்பளம் தருவதாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஷில்பா மஞ்சுநாத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் இலக்கியா, சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்து வரும் கிரண் ரதொட் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.