பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி இன்றோடு 9 நாட்கள் முடிவடைய உள்ளன.
முதல் வாரம் எப்போதும் எவிக்ஷன் இருக்காது, ஆதலால் இரண்டாவது வாரமான இந்த வாரத்தில் தான் முதல் எவிக்ஷன் நடைபெற உள்ளது.
இதற்கான மதுமிதா, சேரன், பாத்திமா பாபு, மீரா மிதுன், சரவணன், கவின், சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
OMG.. பாத்திமா பாபுவா இது? வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!
இவர்களில் கவினுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் அவர் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவார்.
அதே போல் சேரன், பாத்திமா பாபு, மதுமிதா ஆகியோர்களுக்கு ஆர்மி உருவாகி இருப்பதால் அவர்களும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மக்களின் கணிப்பு படி எப்படியும் மீரா மிதுன் தான் வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்.
ஆனால் அவர் வெளியேறி விட்டால் பிக் பாஸ் வீட்டிற்கு சண்டைகள் குறைந்து விடும் என்பதால் அவரை எப்படியும் பிக் பாஸ் தக்க வைத்து கொள்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இவர்களுக்கு பிறகு உள்ளவர்களில் சாக்ஷி அகர்வால் இதுவரை மக்களை பெரிதும் கவர்ந்தபடி தெரியவில்லை என்பதால் அவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சரவணன் வெளியேறலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் யூகிக்கின்றனர்.