எனக்கு பிறந்தது இரட்டை குழந்தையா என கண்ணம்மா கேட்க நடு நடுங்கிப் போய்விட்டார் சௌந்தர்யா.
Bharathi Kannamma Update 27.08.2021 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழையபடி மீண்டும் தலைச்சுற்றல் வருவதால் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார். கண்ணாம்மாவை பார்த்ததும் எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறதே என யோசிக்கிறார் டாக்டர். அதன்பிறகு இப் பெயர் என்னம்மா என டாக்டர் கேட்க கண்ணம்மா என் கண்ணம்மா பதில் கூற உன்னுடைய மாமியார் பெயர் சௌந்தர்யா தானே என்ன டாக்டர் கேட்கிறார். கண்ணம்மா ஆமாம் என பதில் கூற உன்னுடைய குழந்தைங்க எப்படி இருக்காங்க எனக் கேட்கிறார் டாக்டர்.
‘ஜெயலலிதா பல்கலை’ விவகாரம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எனக்கு ஒரு குழந்தை தானே என கண்ணன் தான் கூற இல்லையே இரண்டு குழந்தை இருக்கணும். அன்னைக்கு நீ என்கிட்ட ஸ்கேன் பண்றதுக்காக வந்திருந்த. உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுக்கறதுகுள்ள நீ கிளம்பிட்ட பின்னாடி உன்னைத் தேடிகிட்டு உன் மாமியார் வந்தாங்க. அவங்களும் ரிப்போர்ட்டை வாங்காமல் கிளம்பிட்டாங்க. உன் வயித்துல வளர்ந்தது ரெண்டு குழந்தைங்க. அதுல சந்தேகமே இல்லை. உன்னோட இரண்டாவது குழந்தை பற்றி தான் நான் கேட்டேன் என கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மா அப்போ என்னுடைய இரண்டாவது குழந்தை எங்க? யார்கிட்ட இருக்கு என மருத்துவமனையிலேயே அழுகிறார். பின்னர் பிரசவம் நடந்த இடத்துக்கு அத்தை வந்ததா சொன்னாங்க. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சு இருக்கணும் என சௌந்தர்யாவுக்கு போன் செய்கிறார் கண்ணம்மா.
அத்தை கேக்குறதுக்கு என் மேல சத்தியமா உண்மையை மட்டும் தான் சொல்லணும் என்று கூறி எனக்குப் பிறந்தது ரெட்ட குழந்தையா என கண்ணம்மா கேட்கிறார். இதனால் திக்குமுக்காடிப் போன சௌந்தர்யா பதில் சொல்ல முடியாமல் கண்ணீருடன் திகைத்துப் போய் நிற்கிறார். அவருடைய கணவர் என்னாச்சு என கேட்க பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார் சௌந்தர்யா.
பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
அதன்பிறகு கண்ணம்மா சொல்லுங்க அத்தை கேட்குதா என திரும்பத் திரும்ப கேட்க நீ பேசுறது கேட்கல கண்ணம்மா எனக் கூறினார் திரும்ப கூப்பிடுறேன் இரு என்று போனை கட் செய்து விடுகிறார். கண்ணம்மாவுக்கு ஒரு நாள் இந்த உண்மை தெரியும் நீ எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் தெரியும் என்று நான் நினைச்சு கூட பாக்கல என தன் கணவரிடம் கூறி அழுகிறார் சௌந்தர்யா. என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்கன்னு சொல்றா என்னால எப்படிங்க முடியும். எதிர்காலத்தில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்னு சேருவாங்க என்ற நம்பிக்கையில தான் இந்த பாவத்தை பண்ண ஆனா அது இதுவரைக்கும் நடக்கல என அழுதுகிறார் சௌந்தர்யா.
இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட். கண்ணம்மாவின் கேள்விக்கு சௌந்தர்யா என்ன பதில் சொல்லப்போகிறார்? உண்மையை போட்டு உடைப்பாரா? அல்லது மறைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.