துளசி, சௌந்தர்யா சந்திப்பால் பாரதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
Bharathi Kannamma Update 11.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. நேற்று துளசியை சந்தித்து கண்ணம்மா இரட்டை குழந்தை பற்றி உன்னிடம் கேட்டால் உண்மையை சொல்லிடாதே என கூறினார். இவர்களது சந்திப்பால் பாரதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படியொரு கேப்டன் பதவி, எனக்கு தேவையில்லை.. ரஷித்கான் ராஜினாமா..
துளசியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற கண்ணம்மா இரட்டை குழந்தை பற்றி உனக்கு தெரியுமா என கேட்க சௌந்தர்யாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற எனக்கு தெரியாது எனக் கூறி சமாளித்து விடுகிறார்.
அப்போதும் கண்ணம்மா சௌந்தர்யா அத்தை தான் என்னுடைய இன்னொரு குழந்தையை தூக்கிக்கொண்டு போய் பாரதியிடம் கொடுத்து விட்டதாக உறுதியாக இருக்கிறார்.
இதற்கிடையில் வெண்பா வீட்டிற்கு செல்லும் பாரதி துளசி, சௌந்தர்யா சந்திப்பு பற்றி பேசுகிறார். கண்ணம்மா பிரசவத்தின் போது வெண்பா அங்கிருந்தது பற்றி நினைத்து குழம்பி கொள்கிறார்.
சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கண்ணம்மாவின் ஆட்டோ டிரைவர் அண்ணா உன்னுடைய கணவர் பாரதி டாக்டர் தானா என கேட்கிறார். அது எப்படி உங்களுக்கு தெரியும் என கண்ணம்மா கேட்க நடக்கிறதெல்லாம் பார்க்க அப்படி தான் இருக்கு என கூறுகிறார்.
ஹேமா எதுக்கு இங்க வந்து உன்கூட இருக்கணும், லஷ்மி எதுக்கு அங்க போய் இருக்கணும். ரெண்டு பேருக்கும் ஏக்கம் இருக்கு என கூறுகிறார். இதையெல்லாம் நினைத்து மீண்டும் கண்ணம்மா யோசனை செய்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.