அஞ்சலி வளைகாப்பில் வெண்ணிலா அசிங்கப்பட அதன்பின்னர் சௌந்தர்யாவிடம் கண்ணம்மா பல கேள்விகளைக் கேட்கிறார்.

Bharathi Kannamma Update 06.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற பின்தான் பாரதியின் மனைவி போல நடந்து கொள்ள முயற்சி செய்தார். இதனால் கண்ணம்மா வேதனையில் தப்பிக்க அஞ்சலி வெண்பா பாரதியின் மனைவி இல்லை என்ற உண்மையை உடைத்தார்.

இதனால் வெண்பா, பாரதி என இருவரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அதன் பின்னர் அஞ்சலி வீட்டார் உறவினர் ஒருவர் நீ டாக்டர் தம்பியோட மனைவி இல்லையா, அப்புறம் எதுக்கு அவரோடு இப்படி உரசிட்டு நிக்குற? இரண்டு நாளில் எல்லாத்துக்கும் ஒரு வரம்பு இருக்கு, எல்லா இடத்துக்கும் இப்படி வந்துடுவியா? நீ எல்லாம் என்ன ஜென்மமோ என திட்டுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (6.9.2021 : திங்கள் கிழமை)

அதன் பின்னர் அஞ்சலி கண்ணம்மாவை அழைக்கிறார். கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்கின்றனர். சௌந்தர்யா வெண்பாவை இன்னும் வெறுப்பேற்ற குடும்பமா சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் கூறி அந்த போட்டோவை வெண்பாவை எடுக்க சொல்கிறார். அகிலன் வெண்பாவிடம் செல்போனை கொடுத்து எடுங்க என கூறுகிறார்.

பின்னர் அந்த போட்டோவை பார்த்து சௌந்தர்யாவும் அவருடைய கணவரின் சிரித்துக் கொண்டிருக்க அந்த சமயத்தில் கண்ணம்மா அங்கே வருகிறார். சௌந்தர்யாவிடம் பாரதிக்கு வெண்பாக்கள் கல்யாணம் ஆகலைனு ஏன் என்கிட்ட சொல்லாமல் மறைச்சீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு சௌந்தர்யாவின் கணவர் பாரதி வாங்கிய சத்தியம் தான் காரணம் என கூறுகிறார். அப்படினா நீங்க உண்மையை சொல்லி இருக்கலாமே மாமா எனக்கேட்க நான் உண்மையை சொல்லி இருந்தாலும் அந்த பழி சௌந்தர்யா மேல தான் விழும்‌. அதனாலதான் சொல்லல என கூறுகிறார்.

அப்படின்னா ஹேமாவோட அம்மா யாரு என கண்ணம்மாபேட்டை சௌந்தர்யா கோபப்படுவது போல பேசுகிறார். பின்னர் அது ஆச்சரியத்தில் இருந்து தத்தெடுத்து வந்த குழந்தை என கூறுகிறார். இதற்கு கண்ணம்மா அம்மா என்கூட இருந்தா பெத்த பொண்ணு கூட இருக்கிற மாதிரி இருக்கு. அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்குது. என் கூடவே இருக்க ஆசைப்படுறா. என்னை மாதிரியே இருக்கா. அவளைப் பார்க்கும் போது சின்ன வயசுல என்ன பார்த்த மாதிரியே இருக்கு என கண்ணம்மா கேட்க அதற்கு சௌந்தர்யா கடவுள் கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் என்கிட்ட கேட்கிறியாம்மா எனக் கூறுகிறார்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்த வருகிறது Survivor Show – எப்போது முதல் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

அந்த கடவுளுக்கு கூட சில விஷயங்களுக்கு உண்மை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்களுக்கு கண்டிப்பா தெரியும். டாக்டர் எனக்கு இரட்டை குழந்தைகள் இரண்டுமே என் குழந்தைகள் பிறந்ததா சொன்னாங்க. ஒரு பொண்ணு லட்சுமி நான் என்னுடைய இன்னொரு பொண்ணு எங்க என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். யாரோ உன் கிட்ட பொய் சொல்லி இருக்காங்க என சௌந்தர்யா கூட டாக்டர் எதுக்கு பொய் சொல்லணும் அதற்கு என்ன அவசியம் என கண்ணம்மா கூறுகிறார்.

மேலும் ஹேமா என்னுடைய பொண்ணு, என்ன மாதிரியே இருக்கா. அவளை நீங்க என்கிட்ட இருந்து பிரிச்சுக்கொண்டு போய் பாரதி கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லி இருக்கீங்க கரெக்டா அதுதானே உண்மை என கேட்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.