பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதிக்கு இரண்டு குழந்தைக்கு அப்பா தான் தான் என்ன தெரிந்த பிறகு கண்ணம்மா பாரதியை விட்டு விலகி வேற ஊருக்கு சென்ற நிலையில் பாரதியும் அதே ஊருக்குச் சென்று கண்ணம்மாவை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கி இருந்தார்.

இந்த நிலையில் கண்ணம்மாவை அசிங்கப்படுத்திய பாண்டியுடன் சண்டை போட்ட பாரதி பாண்டியிடம் அடிவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் கணேசனால் சௌந்தர்யாவுக்கு தெரிய வர குடும்பம் மொத்தமும் கிளம்பி பாரதி பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறது.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் அடுத்த நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சௌந்தர்யா ஹாஸ்பிடலுக்கு வந்ததும் பாரதி அவர்களை பார்த்து நீங்கள் யார் என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதன் மூலம் பாரதி சுயநினைவை இழந்தது தெரியவந்துள்ளது. பழசை மறந்து பாரதி அதிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறார்? கண்ணம்மாவுடன் ஒன்று சேர்வாரா இல்லையா என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பது உறுதியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.