புது முடிவோடு பாரதி வீட்டிற்கு சென்றுள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 28.01.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பாவை காப்பாற்ற போன பாரதி, அவரின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார். வழக்கம்போல் வெண்பா நைசாக பேசி பாரதியை தன் பக்கம் இழுத்து விடுகிறார். வெண்பா சொன்னதை பாரதியும் நம்பத் தொடங்கி விடுகிறார். இப்படியான நிலையில் செல்வா மீண்டும் நீ எப்படிடா அந்த கண்ணம்மா வீட்டுக்கு போனேன் அவள் முகத்தை எப்படி தனமும் பார்த்த? அவ கையால சமைச்சது வேற சாப்பிட்டு இருக்க உன்னால் எப்படி முடிந்தது என கேட்கிறார்.

அதனாலதான் 6 நாள்ல திரும்பி வந்துவிட்டேன் என கூறுகிறார் பாரதி. உங்க வீட்ல வேற ஏதோ பூஜை ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துகிட்டீங்கனு சொன்னாங்க என்னாச்சு என கேட்க அவர் செஞ்ச தப்ப எல்லாத்தையும் மன்னிச்சிடு அவள ஏத்துக்கலாம் என்ற முடிவோடு தான் இருந்தேன். அவகிட்ட ஒரே ஒரு விஷயத்தை தான் கேட்டேன் ஆமா நான் தப்பு பண்ணிட்டேன் அதை மட்டும் ஒத்துக்கோ என்கிட்ட மன்னிப்பு கூட கேட்க தேவையில்லை என சொன்னேன். ஆனா அவ எதுவுமே சொல்லாம அழுதுகிட்டே வெளியே போயிட்டா என பாரதி கூறுகிறார்.

நல்ல வேளை கண்ணம்மா ஆம் என்று ஒத்துக்காம சுயமரியாதைனு கிளம்பி போயிட்டா, அது எனக்கு நல்லதா போச்சு என மனதுக்குள் பேசிக் கொள்கிறார் வெண்பா. எப்படிடா உன்னால அப்படி ஏற்றுக்கொண்டு வாழ முடியும். அவளுக்கு எவ்வளவு திமிரு. அவ தப்பு பண்ணி அதிலேயே மூழ்கி போய்ட்டா. இனி அவளால அதிலிருந்து வெளியே வர முடியாது. என்னதா பிரச்சனை வந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன் என பாரதியிடம் சொல்கிறார் வெண்பா. எனக்கு நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அது ஒண்ணு தான் என வெண்பா கூறுகிறார்.

பிறகு அங்கிருந்து வீட்டுக்கு வந்த பாரதி சாப்பிட என்ன இருக்கு என வீட்டு வேலைக்கார அம்மாவிடம் கேட்க இப்ப தான் சமைக்கிறேன் என கூறுகிறார். சௌந்தர்யா சாப்பாட்டுக்கு இங்க எதுக்கு வந்த கண்ணம்மா வீட்டுக்குப் போன அரை மணி நேரத்துல அவ விதவிதமா சமைச்சு போடுவா என கூறுகிறார். என்ன எங்க போக சொல்றீங்களா என பாரதி கேட்க கோர்ட்டு தீர்ப்பு அது தானே. கண்ணம்மா தான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறார் எங்களையும் அதை அனுபவிக்க வச்சுடாத என கூறுகிறார். சரி இன்னைக்கு ஒரு நாள் இங்கே தங்கி இருக்கிறேன் என பாரதி சொல்ல ஒரு ஆம்பள நீயே ஒரு நாள் இரவு வெளியே தங்க யோசிக்கிற ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி நிறைமாத கர்ப்பிணியாக கண்ணம்மா வெளியே போய் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பானு யோசிச்சு பாரு என கூறுகிறார்.

பாரதி எனக்கு ஒரு உதவி பண்ணனும் கண்ணம்மா வீட்ல என்னுடைய லேப்டாப் முக்கியமான ஒரு ஃபைல் எல்லாமே இருக்கு அத மட்டும் எடுத்துட்டு வந்து கொடுங்க என கூறுகிறார். என்னால முடியாது என சவுந்தர்யா கூறிவிடுகிறார். அவங்களோடு தேவைக்கு அவங்க தான் போகணும் என கூறுகிறார். இதை எங்க பிரச்சனைக்குள்ள நீங்க வரும்போதும் சொல்லி இருக்கணும். நீங்களே பேசித் தீர்த்துக்கோங்க என சொல்லி இருக்கணும் என கூறுகிறார்.

சௌந்தர்யா இனிமே உங்களோட விஷயத்துல நான் தலையிட மாட்டேன் நீங்க சேர்ந்து வாழறீங்களோ, வாழலயோ, இல்ல விவாகரத்து வாங்கறீங்களோ என்னமோ பண்ணிட்டு போங்க என கூறி விடுகிறார். இப்ப சொன்னீங்களே இது கடைசி வரைக்கும் பாலோ பண்ணுங்க என பாரதி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சௌந்தர்யா சாப்பிட வந்த உடனே நானே சாப்பிடாம பண்ணிட்டேனே என கண்கலங்கி அழுகிறார். அகில் சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்த பக்கம் தன் அப்பா சொன்னது தான் சரி இனி தன்னுடைய மகளின் தன்மானத்திற்கு சேர்த்து போராடனும் என முடிவு செய்கிறார். எப்படியாவது என்னுடைய குழந்தைகளுக்கு அப்பா பாரதிதான் என நிரூபித்தாக வேண்டும் என முடிவு செய்கிறார். இனி தன் மானம் எல்லாம் எனக்கு தேவை இல்லை. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம். ஹேமாவாவது அப்பா பாசத்தில் வளரட்டும் எனவும் முடிவு செய்கிறார்.

பிறகு அவருடைய சூட்கேஸ் லேப்டாப் மற்றும் டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு பாரதி வீட்டிற்குச் செல்கிறார் கண்ணம்மா. அங்கு ஹேமாவை பார்த்ததும் ஹேமா லட்சுமி கூட்டிட்டு வந்து இருக்கீங்களா என கேட்கிறார். இல்ல அடுத்த முறை வரும்போது கூட்டிட்டு வருகிறேன் என சொல்கிறார். பாரதிகண்ணம்மா வந்திருப்பதை பாட்டு பாட்டு எங்க இருக்காங்கனு பார்த்துட்டு வா என ஹேமாவை அனுப்பி வைக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.