வெண்பாவை காப்பாற்றப் போன பாரதிக்கு அதிர்ச்சியான விளக்கத்தை கொடுத்துள்ளார் வெண்பா.
Bharathi Kannamma Episode Update 27.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. என் பேர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சாந்தி சொன்னதையடுத்து பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடி வருகிறார் பாரதி.
வீட்டிற்கு வந்த பாரதி சாந்தியோடு சேர்ந்து கதவைத் தட்ட வெண்பா உள்ளே அமர்ந்து சந்தோஷமாக ரசித்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாரதி கதவை உடைத்து உள்ளே வரும்போது தூக்கில் தொங்குவது போல நடிக்கிறார். உடனே பாரதி அவரை கீழே இறக்கி தண்ணீர் கொடுத்து தேற்றுகிறார். வெண்பா அழுது நாடகம் போடுகிறார். பாரதி எதுக்கு லூசுத்தனமா இப்படி பண்ற நான் ஏதோ கோபத்துல சொன்னதுக்காக செத்துப் போவயா என திட்டுகிறான். இனிமே இப்படி பண்ணாத என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார் பாரதி.
இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையா? நான் என்ன தப்பு பண்ணேன் என வெண்பா கேட்க அஞ்சலிக்கு நீ பண்ணது பெரிய துரோகம். கண்ணமா எனக்கு துரோகம் பண்ணும் போது இருந்த வலியை விட 100 மடங்கு அதிகமாக இருந்தது என கூறுகிறார். கொஞ்சமாச்சும் என் பக்கம் இருக்க நியாயத்தை நெனச்சு பாரு என கூறுகிறார் வெண்பா. அப்படி என்ன நியாயம் என நான் கேட்க அஞ்சலிக்கு அந்த குழந்தையை பெத்துக்க சக்தி கிடையாது. அந்தக் குழந்தை வளர வளர அது அவளோட உயிருக்கே ஆபத்து. நான் எவ்வளவு சொல்லியும் அவ இந்த குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தா. ஆனா அத அப்படியே விட முடியாது என்பதால்தான் அந்த குழந்தையை கலைக்க மாத்திரை எழுதிக் கொடுத்தேன்.
என்னோட பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்தாலும் சாப்பிட மாட்டா என்பதால்தான் அதை உன்னோட பிரிஸ்கிரிப்ஷன்ல எழுதிக் கொடுத்தேன். அஞ்சலி செத்து போனா உங்களுக்கு சந்தோஷமா? இத நீ ஏன் கிட்ட சொல்லலனு நீ கேட்கலாம் ஏற்கனவே நீ ஏகப்பட்ட பிரஷர்ல இருக்க. இதை வேற சொல்லி காயப்படுத்த வேண்டாம் என்று தான் சொல்லல என கூறுகிறார். எனக்கு நீ வேணும் பாரதி. எப்பவும் நான் உன்னோட இருக்கணும். என்னை திட்டு அடி என்ன வேணாலும் பண்ணு ஆனா என்னை வெறுக்க மட்டும் செய்யாத என பாரதியை கட்டிப்பிடித்து அழுகிறார். வெண்பா சொன்னதை நம்பி பாரதியும் சரி என அமைதி ஆகிவிடுகிறார்.
இந்தப் பக்கம் கண்ணம்மா துணி மடித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய அப்பா வீட்டிற்கு வருகிறார். என்னப்பா அழுதுகிட்டே வந்தாங்க உயிரோடு எங்க இருக்காளா இல்ல தூக்குல தொங்கிட்டாலா பார்க்க வந்தீங்களா என கேட்கிறார். என் பொண்ணு அப்படி கோழைத்தனமான முடிவு அல்ல எல்லாம் எடுக்க மாட்டானு என்று எனக்கு தெரியும் என கூறுகிறார் அவருடைய அப்பா.
பிறகு இருவரும் பாரதி செய்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர் உன்னை அசிங்கப்படுத்தி பேசும்போது எனக்கு செவிலியே அடி கொடுக்கணும் போல இருந்தது என கூறுகிறார். இனிமே நீ இங்கே இருக்காதே என்னோட வந்துடு பாக்கிய லட்சுமியை நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார். நீங்க சொல்ற மாதிரி அங்க வந்துட்டா லட்சுமிக்கு என்னன்னு சொல்றது என கேட்கிறார் கண்ணம்மா. இவங்க தாத்தா தாத்தா பாட்டினு உண்மையை சொல்லு. அப்படி சொன்னா அஞ்சலி யாரு அகிலன் யாரு அப்ப பாரதி யாரு என அவர் கேள்வி மேல கேள்வி கேட்பா. கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும் என கூறுகிறார்.
நாளைக்கு லட்சுமி கல்யாணம் அப்பா யாருன்னு கேள்வி வரும் அப்போ என்ன பதில் சொல்லுவ என கேட்கிறார். அது எதுக்கு இப்போ என கண்ணம்மா கேட்க இது வரைக்கும் நீ உன்னுடைய நியாயத்துக்காவும் சுய மரியாதைக்காகவும் போராடின. இனிமே உன் பொண்ணோட சுய மரியாதைக்காகவும் சேர்ந்து போராடணும். பாரதிதான் அப்பானு நீ தான் புரிய வைக்கணும். அவரை நீதான் மாற வைக்கணும். அதுவா மாறும்னு நெனச்சா மாறாது என கூறுகிறார். அதற்கான முயற்சியை இப்போதிலிருந்தே எடு கண்ணம்மாவுக்கு அறிவுரை கூறுகிறார்.
கண்ணம்மாவும் அப்பா சொல்வது சரி என்பது போல யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.