பாரதி செத்துப்போ என்று சொன்ன நிலையில் வெண்பா புது திட்டம் போட்டுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 26.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணமா வீட்டுக்கு போன பாரதி மேலே செல்லாமல் கீழே நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் ஆட்டோ டிரைவர் குமார் மேலே இருந்து வருகிறார். அவரை நிறுத்தி மேலே என்னுடைய ரூமில் என்னுடைய சூட்கேஸ் துணிமணிகள் எல்லாம் இருக்கிறது அதை எடுத்து வந்து கொடு என கூறுகிறார். எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்களே போய் எடுத்துக்கங்க என சொல்கிறார். பணம் தருகிறேன் எடுத்து வா என பாரதி சொன்ன பணத்தை வைத்தே எல்லாத்தையும் வாங்கி விடலாம் என நினைக்காதீர்கள். கண்ணம்மா பாவம் இப்படி அவளை நம்ப வைத்து மோசம் பண்ணிட்டீங்க. கோர்ட்டுல நீங்க ரெண்டு பேரும் ஆறு மாசம் சேர்ந்து இருக்கும் என்று தீர்ப்பு வந்ததும் அவை எவ்வளவு சந்தோஷப்பட்டா தெரியுமா.? இந்த ஒன்பது வருஷத்தில் அவளோட முகத்துல இப்படி ஒரு சந்தோஷத்தை நான் பார்த்ததில்லை என சொல்கிறார். நீங்க எவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கீங்க ஆனா நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு உங்களால புரிஞ்சுக்க முடியல என திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனையடுத்து பாரதி மேலே செல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

மருத்துவமனையில் அவர் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த நர்ஸ் ஒரு ஃபைல் குறித்து கேட்கிறார். முதலில் மருத்துவமனையில் தேடிய பாரதி பிறகு அது கண்ணம்மா வீட்டில் இருப்பதை நினைவு கூர்கிறார். இந்தப் பக்கம் கண்ணம்மா வடிவுகரசி இடம் அவருடைய பொருட்களை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். முக்கியமான பைல்கள் ஏதாவது இருக்கும் என கூறுகிறார். எனக்கு அவர் மேல தான் கோபி அவருடைய சூட்கேஸ் மேல இல்லை என சொல்கிறார்.

அவர் திரும்பவும் இங்க வந்து தான ஆகனும். 6 மாசம் சேர்ந்து தானே வாழணும். அது தானே நீதிமன்ற தீர்ப்பு என சொல்ல யார வேணாலும் கைய புடிச்சு கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்து விடலாம் ஆனால் புருஷன் பொண்டாட்டி வாழ்க்கை என்பது அப்படி இல்லை என சொல்கிறார். நான் நீதிபதியிடம் சொல்கிறேன் என வாய்தா வடிவுக்கரசி சொல்ல அதை எல்லாம் சொல்லாதீங்க என கூறுகிறார். இனிமே அவர் இங்கு வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என கண்ணம்மா கூறுகிறார்.

அதன்பிறகு பாரதி மருத்துவமனையில் இருக்கும்போது அவருக்கு வெண்பா போன் செய்கிறார். பாரதி என்கிட்ட பேசு என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோ என கூறுகிறார். எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா நான் உனக்காகத் தானே அப்ராட்ல இருந்து இங்க வந்தேன் என சொல்கிறார். நீ இப்படி சொன்னா நான் என்ன பண்றது என வெண்பா கேட்க எங்கேயாவது போ எனக்கென்ன வந்துச்சு என பாரதி கூறுகிறார். நீ இப்படியெல்லாம் சொன்னா நான் செத்து போய்டுவேன் என வெண்பா சொல்ல செத்துப் போ என கூறி போனை வைத்து விடுகிறார் பாரதி.

பாரதி இப்படி சொன்னதை வைத்து வெண்பாவும் சாந்தியும் ஒரு திட்டம் போடுகின்றனர். தற்கொலை செய்வது போல வெண்பா நடிக்க உள்ளார். உடனே சாந்தி பாரதிக்கு போன் செய்து நீங்க வெண்பா அம்மாவை செத்துப் போக சொன்னீங்களா? பாரதியின் அசைத்துப் பார்க்க சொல்லிட்டான் என அழுது கொண்டே மேலே இருக்க ரூமுக்குள்ள போய் தாழ்ப்பாள் போட்டு இருக்காங்க. எவ்வளவு தட்டியும் திறக்கலை எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கூறுகிறார். பதறிப்போன பாரதி முன்பாக பார்த்துக்கோ உடனே நா அங்க வரேன் என கூறுகிறார். பாரதி சொன்னதை கேட்டு வெண்பாவும் சாந்தியும் மகிழ்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.