மொத்தமும் முருங்கைக்காய் ஐட்டமாக சாப்பிட்டு நடு இரவில் தவியாய் தவிக்கிறார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 24.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா லட்சுமி மற்றும் அம்மாவுக்காக பள்ளியில் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இருவரும் வந்ததும் உங்களுக்கு தயிர்சாதம் கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். அந்த நேரத்தில் லட்சுமி பரம்பரைனா என்னம்மா? நான் எந்த பரம்பரை? ஹேமா வேணு சௌந்தர்யா பரம்பரைனு சொன்னா.. நான் எந்தப் பரம்பரை என கேட்கிறார். உடனே ஹேமா சாரி சமையல் அம்மா நான் தான் அப்படிக் கேட்டேன் எனக் கூறுகிறார். ஹேமா அப்படி கேட்டதும் எனக்கு அழுகை வந்துடுச்சு. அப்புறம் தாத்தா பாட்டி அகில் அங்கிள் எல்லாரும் எங்கிட்ட வந்து பேசினாங்க. அகில் அங்கிள் நீயும் இனிமே வேணு சௌந்தர்யா பரம்பரையினு சொல்லு என சொன்னார். அப்படி சொல்லலாமா தப்பு இல்லையா என கேட்க பெரியவங்க எதுவாக இருந்தாலும் யோசிச்சு தான் சொல்வாங்க அப்படியே சொல்லு என கண்ணம்மா கூறுகிறார். அதன்பிறகு ஹேமாவும் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

இந்த பக்கம் பாரதி மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு வர அப்போது வந்த பூக்கார பாட்டியம்மா நீங்க கொடுத்த மருந்து மாத்திரைகளால் வலி எல்லாம் போயிடுச்சு. என்கிட்ட கொடுக்க பணம் இல்லை இந்த பூ வச்சுக்கோங்க என மல்லி பூவை கொடுக்கிறார். இத வெச்சிட்டு நான் என்ன பண்றது என பாரதி கேட்க உங்க பொண்டாட்டி கண்ணம்மா கொடுங்க அவ வச்சு பா என கூறுகிறார்.

ஆனால் பாரதி கண்ணம்மாவிடம் கொடுக்க முடியாது என்பதால் மேசையின் மீது வைத்து விடுகிறார். அந்த நேரத்தில் வந்த அறந்தாங்கி நிஷா உன் புருஷன் ரொமாண்டிக் மூட்ல இருக்காரு போல. அதான் உனக்கு மல்லிப்பூ வாங்கி வந்திருக்கிறார் என சொல்ல கண்ணம்மா அதை நம்பவில்லை. அவர் இன்னும் வரவே இல்லை இது நீங்கதான வாங்கிட்டு வந்தீங்க என சொல்ல அங்க பாரு வெளியே ஷூ இருக்கு என காட்டுகிறார். பிறகு அதை கண்ணம்மாவுக்கு வைத்துவிடுகிறார்.

அதன் பிறகு வெளியே வந்து பார்த்த பாரதிகண்ணம்மா தலையில் பூ இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். கண்ணம்மா மல்லி பூவை எடுத்து எடுத்து முன்னாடி விட்டு தேங்க்ஸ் கூறுகிறார். அது உனக்கு வாங்கிட்டு வரல என சொல்லியும் அதை கண்ணம்மா நம்பவில்லை. அதன் பிறகு இரவு 9 மணி ஆனதும் பாரதி பயங்கரமா பசிக்குது என வந்து பார்க்க கண்ணம்மா ஆளை காணும். இன்னும் எதுவுமே சமைக்காமல் எங்க போனா யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கண்ணம்மா உள்ளே வருகிறார்.

ஏன் இன்னும் சமைக்கல என கேட்க கீழே இழுக்க வடிவுக்கரசி அக்கா இன்னைக்கு அவங்களே சமைச்சு தரதா சொன்னாங்க என கூறுகிறார். பிறகு வாய்தா வடிவுகரசி எல்லாம் முருங்கை காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை வைத்து விதவிதமாக சமைத்து விட்டு வந்து வைக்கிறார்.

பாரதி சூப்பராக இருக்கு என அளவுக்கு அதிகமாக முருங்கைக்காயை சாப்பிடுகிறார். கண்ணம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதனைத் தொடர்ந்து வெளியான புரோமோவில் சாப்பிட்ட முருங்கைக்காய் ஐட்டம் எல்லாம் வேலையை காட்ட பாரதி தவியாய் தவிக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.