கண்ணம்மாவை பாரதியிடம் மாட்டிவிட்டு உள்ளார் ஹேமா.
Bharathi Kannamma Episode Update 21.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா மாவு ஆட்டிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த பாரதியை இவ்வளவு நேரம் அங்கு தானே நீங்க எங்க போய்ட்டிங்க டீ குடிக்க வா? என்கிட்ட சொல்லியிருந்தா நான் போட்டு தந்து இருப்பேன்ல என சொல்கிறார். உடனே பாரதி எதுக்கு நீ ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கற என பேச அந்த ஏதாச்சு பிளான் பண்றீங்களா? இங்கு யாரை சொல்றீங்க என கேட்க எல்லாம் எங்க அம்மா, நீ எல்லாரும் தான் சொல்றேன் நீங்க எல்லாம் கூட்டு களவாணிகள் தானே என கூறுகிறார்.
இந்த நேரத்தில் சௌந்தர்யாவின் மொபைலில் இருந்து கண்ணம்மாவுக்கு போன் வருகிறது. இதனைப் பார்த்த பாரதி நான் சொன்னது உண்மை ஆயிடுச்சு, அவன்கிட்ட இப்படி நடந்துக்கோ அப்படி நடந்துகொண்டேன் எங்க அம்மா கிளாஸ் எடுப்பாங்க அதானே என கூறுகிறார். நீங்களே போன் பண்ணி ஸ்பீக்கர் ல போடுங்க என கூறுகிறார் கண்ணம்மா.
பிறகு பாரதி போனை ஆன் செய்ய லட்சுமி பேசுகிறார். எப்படி இருக்க என்ன நலம் விசாரித்துவிட்டு நீ மட்டும் தனியா இருக்க போரடிக்குதா என கேட்கிறார். நான் இங்க தனியா இருக்கேன் என் கூடத்தான் என கண்ணம்மா தொடங்க பாரதி சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார். அதன் பிறகு கீழ் வீட்டில் புதுசாக ஒரு ஆண்டி வந்து இருக்காங்க அவங்க அடிக்கடி வந்து பேசிட்டு இருப்பாங்க என கூறுகிறார். பிறகு நீ ஊட்டி விட சொல்வியே இங்க யார் உனக்கு ஊட்டி விடுறா எனக் கேட்க சௌந்தர்யா பாட்டுதான் ஊட்டி விட்டாங்க. இங்கே ஹேமா எப்படியோ நீயும் அப்படித்தான் என சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அஞ்சலி ஆண்ட்டியோட பாப்பா கிட்ட ஜாலியா விளையாடுறோம் என கூறுகிறார். அவ உனக்கு தம்பி மாதிரி என கண்ணம்மா கூறுகிறார். அந்த நேரத்தில் பாரதி முகம் சுருங்க இங்க ஏதோ புகையுது நான் அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்து விடுகிறார் கண்ணம்மா.
அதன்பிறகு ஹேமா பாரதிக்கு போன் செய்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா தெரியாமல் இரும்பிவிட யாரது என ஹேமா கேட்கிறார். சமையல் அம்மா குரல் மாதிரியே இருக்கு என கூறுகிறார். உங்க சமையல் அம்மாக்கு மட்டும்தான் இருமல் வருமா என பாரதி கேட்கிறார். அவங்களை நான் பார்த்து ரொம்ப நாளாச்சு என பாரதி சொன்ன பொய் சொல்லாதிங்க நேத்துக்கூட பார்த்தீர்கள் தானே. என்ன சொல்ற எனக் கேட்க அவங்க உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வந்தாங்க தானே போட்டோ அனுப்பி இருந்தாங்க என கூறுகிறார்.
அதன்பிறகு பாரதி போனை வைத்துவிட்டு எப்படி நீ போட்டோ எடுத்து அனுப்புன என கண்ணம்மாவிடம் சத்தம் போடுகிறார். அதன்பிறகு ஒன்னே ஒன்னு தான் சும்மா அனுப்பினேன் என சொல்ல அத குழந்தை பார்த்து சந்தேகம் வருவதற்கா என திட்டுகிறார்.
இந்த பக்கம் அஞ்சலி குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய தோழி போன் செய்து தாய்ப்பால் கொடுக்காத அழகு போய்விடும் பசும் பால் கொடு என கூறுகிறார். அஞ்சலியும் பசும்பால் கொடுத்து பார்க்க முடிவெடுக்கிறார். அகிலன் காரில் சென்று கொண்டிருக்க அவருக்கு அவருடைய நண்பர் போன் செய்து அஞ்சலியை கடத்தின சிசிடிவி புடேஜ் ஐ அனுப்பி வைத்திருப்பதாக கூறுகிறார்.
இந்த பக்கம் பாரதி எதையோ நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா என்ன ஏது என கேட்க நாளைக்கு காலேஜ் ஸ்டுடென்ட் க்கு ஒரு செமினார் கிளாக் இருக்கு என கூறுகிறார். அதற்காகத்தான் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பதாக சொல்ல இந்த நேரத்தில் வாய்தா வடிவுக்கரசி நைன் ஆப் செய்து கரண்ட் போவது போல செய்து விடுகிறார். பிறகு கண்ணம்மா ஒரு லைட்டை கொண்டு வந்து கொடுக்கிறார். பாரதிக்கு காபி போட்டுக்கொடுத்து கொசு கடிக்காமல் விசிறி கொண்டு இருக்கிறார்.
அப்படியே இருவரும் தூங்கி விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.