கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்த கையோடு பாரதி எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 17.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நீதி காக்கும் அம்மன் கோவிலில் பொங்கல் வைக்க போன பாரதி கண்ணம்மா பக்கம் நீதி இருப்பதாக வந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கண்ணம்மா சௌந்தர்யா என அடுத்தடுத்து பாரதியை கேள்விகளால் தொலைக்க பதில் சொல்ல முடியாமல் தவித்த பாரதி அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினார்.
ஒரு மலை மீது ஏறி அமர்ந்து கொண்டு நான் இப்போ என்னதான் பண்றது? ஒன்னுக்கு இரண்டு டெஸ்ட் எடுத்துட்டேன், அதை நம்புவது இல்லை நம்பிக்கையை நம்புவதா என புலம்பிக் கொண்டிருக்கிறார். இனி என் மனசாட்சிப்படி ஒரு முடிவு எடுத்தேன் என முடிவு செய்கிறார்.
இந்த பக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் எல்லாம் நல்லதுக்கு என நினைத்துக் கொள் இதுவரைக்கும் யார் சொல்வதையும் கேட்காமல் இருந்த பாரதி முதல் முறையாக அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு அவனை இந்த கோவிலுக்கு கூட்டி வந்திருக்கிறான். இனிமே எல்லாம் நல்லதாகவே நடக்கும் என நினைக்கிறேன். அடுத்து வீட்ல சத்தியநாராயண பூஜை இருக்கு. அந்த பூஜையில் நீங்கள் இருவரும்தான் கலந்து கொள்ள வேண்டும். அந்த பூஜைக்கு பிறகு நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புவோம் என கூறுகிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த கண்ணம்மா பாரதியிடம் எதையும் கேட்காமல் காபி போட்டு கொடுக்கிறார். பாரதி நான் 6 நாள்தான் இந்த வீட்ல இருப்பேன் என்று சொல்லியிருந்தேன் இன்னைக்கு நைட்டு 6 நாள் முடியுது நாளைக்கு காலையில நான் இங்கே இருக்க மாட்டேன் என கூறுகிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.
உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எட்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த சந்தேகம் இப்ப வரைக்கும் உங்க மனசுல இருக்கு. நான் என்னதான் பண்றது எத்தனை முறைதான் நிரூபிக்கிறது என கதறி அழுகிறார். என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை நான் நாளைக்கு இங்க இருக்க மாட்டேன் என மீண்டும் பாரதி சொல்ல அத்தை கிட்ட என்ன சொல்லுவீங்க எனக் கேட்கிறார் கண்ணம்மா. அத நான் பார்த்துக்கிறேன் என பாரதி சொல்ல கோர்ட்ல என்ன பதில் சொல்வீங்க? அது பத்தி உனக்கு என்ன கவலை என கூறுகிறார்.
மேலும் பாரதி கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் நான் என் மனசாட்சி சொல்வதைக் கேட்டுத்தான் நடக்கிறேன் என கூறுகிறார். என்னைய மனசாட்சி எட்டு வருஷமா ஒருத்தியால் நல்லவ மாதிரி நடிக்க முடியுமா? பார்வை கூட மழை பெய்து பெய்து கரைந்து போகும் ஆனா உன் மனசு இன்னும் அப்படியேதான் இருக்கு என செவுத்தில் இடித்துக்கொண்டு அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.