நீதி கேட்டு கோவிலுக்கு போன பாரதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
Bharathi Kannamma Episode Update 13.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கோவிலில் பெண்மணி ஒருவர் இந்த கோவிலில் பிரச்சனை இருந்தால் தான் வருவார்கள். இருவரும் பொங்கல் வைப்பார்கள் யார் பக்கம் நீதி இருக்கும் அவர்களின் பொங்கல்தான் முதலில் பொங்கும். அவர்கள் பக்கம்தான் நீதி இருக்கிறது என்பது உண்மை. இதுவரைக்கும் இந்த கோவிலில் கிடைத்த நீதி தப்பானது கிடையாது என அவர் கூறுகிறார்.
பிறகு கண்ணம்மா எனக்குள்ள ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது இப்போ தான் புரியுது. பாத்துடலாம் யார் பொங்கல் முதலில் பொங்குகிறது? உண்மையில் யார் பக்கம் நீதி இருக்கிறது என்பதை இந்த அம்மாவே உங்களுக்கு புரிய வைக்கட்டும் என கூறுகிறார் கண்ணம்மா. மேலும் நேரா பாரதியிடம் சென்று இதுக்குத்தான் கூட்டி வந்தீர்களா என கேட்டு விடலாமா இல்ல அத்தையை கூப்பிட்டு விஷயத்தை சொல்லலாமா என யோசித்த கண்ணம்மா வேண்டாம் யாருக்கும் தெரியாமல் கூட்டி வந்து இருக்கார் யாருக்கும் தெரியாமலேயே இருக்கட்டும். இந்த அம்மா கொடுக்கிற நீதியை வைத்தாவது அவர் மாறுகிறாரா என பார்க்கலாம் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார் கண்ணம்மா.
பிறகு பூசாரி சாமியின் அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து வந்து இரண்டும் வைக்கிறார். பிறகு பாரதி எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை அப்படி இருக்கையில் கண்ணம்மா கர்ப்பமாகி விட்டார். எனக்கு துரோகம் செய்துவிட்டார் நான் உன்னை தான் நம்பி வந்து இருக்கேன் உண்மையை எனக்கு தெரிய வை என வேண்டிக் கொள்கிறார். இந்த பக்கம் கண்ணம்மா நான் தப்பானவன் என்பதை அவருக்கு புரியவை என்பதை வேண்டிக் கொள்கிறார்.
பிறகு இருவரும் பொங்கல் வைக்கின்றனர் சாமியார் வந்து பொங்கல் பொங்கிடுத்தா என கேட்கிறார். இருவரும் பொங்கல் வைக்க முதலில் கண்ணம்மாவின் பொங்கல் பானை பொங்குகிறது இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். அதன்பிறகு சாமியாருக்கு தெய்வம் வந்து அவர் அருள்வாக்கு கூறுகிறார். கண்ணம்மாவின் பக்கம்தான் நீதி இருக்கு நீ நினைத்து வந்தது ஒன்று ஆனால் இன்று நடந்தது ஒன்று. யாரோ உன்னுடைய மனசுல தப்பான விதையை விதைத்து இருக்கிறார்கள். இது கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் இதுதான் உண்மை. நீதி காத்த அம்மன் வாக்கு தப்பானது இல்லை. அம்மாவோட நீதிக்கு தலை வணங்கி போ, உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என கூறிவிட்டு பூசாரி செல்கிறார்.
அதன்பிறகு சௌந்தர்யா இங்கு என்ன தாண்டா நடக்குது அவர் என்னென்னமோ சொல்றாரு நீ என்ன நினைச்சு கூட்டிட்டு வந்த என கேட்க கேட்கிறார்களா சொல்லுங்க என கண்ணம்மா கூறுகிறார். பிறகு கண்ணம்மா இந்த கோவில் பற்றி கூறுகிறார். இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா? நீங்க கோவிலுக்கு கூப்பிடும் போதே எனக்கு சிறியதாக சந்தேகம் இருந்தது. ஆனால் எதற்கு நாமாக எதையாவது சொல்லி கெடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது மனதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் இப்பவும் நீங்க மாறல. அடுத்து என்ன பண்ணப் போறீங்க டிஎன்ஏ டெஸ்ட் எப்போ எடுக்கலாம் என கண்ணம்மா கேட்கிறார். நீங்க படிச்ச பெரிய டாக்டர் உண்மையை கண்டுபிடிக்க அறிவியல்பூர்வமாக எவ்வளவோ விஷயம் இருக்கு.
எட்டு வருஷமா வராத நீங்க இப்ப ஏன் வர போறீங்க? இது நீங்க கூட்டிட்டு வந்த கோவில் தான். சாமி சொன்ன உத்தரவை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இந்த சாமி தப்பு சாமி சொன்ன வாக்கு தப்புனு சொல்றதுக்கு சாமி ஒன்னும் என் சொந்தக்காரர் கிடையாது என கண்ணம்மா கூறுகிறார். பிறகு சௌந்தர்யா இப்ப என்னடா பண்ணப்போற இது நீயா கூட்டிட்டு வந்த கோவில் தான், இப்போ சாமி கொடுத்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும் அதுதான் உன்னுடைய கடமை என சௌந்தர்யா சொல்ல பாரதி திருதிருவென நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.