கண்ணம்மாவின் கர்ப்பை சோதிக்க குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுள்ளார் பாரதி.
Bharathi Kannamma Episode Update 12.01.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யா அகிலன் அஞ்சலி மற்றும் இரண்டு குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கடலுக்குள் போகலாம் என அகிலன் சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சௌந்தர்யா சொல்ல ஹேமா இப்போலாம் பாட்டி ஸ்ட்ரிக்டா மாறிட்டாங்க என சொல்லிக் கொண்டிருக்க உங்க பாட்டி அப்போதிலிருந்து அப்படித்தான் என பாரதி குரல் கொடுக்கிறார்.
பிறகு பாரதியைப் பார்த்து உற்சாகமான ஹேமா மற்றும் லஷ்மிக்கு அவர் சாக்லேட் கொடுத்து மேலே அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு நாளைக்கு கோவிலுக்கு போகலாம்னு இருக்கேன் என கூறுகிறார் பாரதி. போயிட்டு வாடா என சௌந்தர்யா சொல்ல நான் மட்டும் இல்லம்மா எல்லாரும் குடும்பத்தோட போகலாம்னு இருக்கேன் என கூறுகிறார். குழந்தைங்க, நீங்க, நானு அகிலன், அஞ்சலி அப்படியே கண் அம்மாவையும் கூட்டிட்டு போகலாம் என சொல்ல சௌந்தர்யா உற்சாகம் அடைகிறார்கள். என்னடா இவ்வளவு மாறிட்ட என சொல்ல அதன்பிறகு பாரதி சரி நான் ஆஸ்பிட்டலுக்கு கிளம்புறேன் என அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இந்தப்பக்கம் வெண்பா என்ன பொய் டாக்டர் தொழில் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க எனக்கு யாருக்காவது ஊசி போடணும் போல இருக்கு என புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு கரெக்டாக சாந்தி வர சாந்தியை கையை நீட்ட சொல்லி ஊசி குத்தி விடுகிறார். பிறகு மாயாண்டி எங்கே என கேட்கிறார்.
இந்த பக்கம் பாரதி கோவிலுக்கு கூப்பிட்டதை நினைத்து சந்தோஷமாக வாய்தா வடிவுகரசியிடம் கூறுகிறார். பிறகு மறு நாள் எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகின்றனர். அங்கு பாரதி நான் தனியா பொங்கல் வைக்கிறேன் கண்ணம்மா தனியா பொங்கல் வைக்கட்டும் என கூறுகிறார். என்னடா சொல்ற? ஏன் அப்படி என சௌந்தர்யா கேட்க இல்லம்மா நான் தனியா பொங்கல் வைக்கிரனு வேண்டிக்கிட்டேன் அதனாலதான் என கூறுகிறார். பிறகு சௌந்தர்யாவும் சரியான சொல்ல பாரதி பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை வாங்கிவர செல்கிறார்.
இந்த பக்கம் அஞ்சலி கண்ணம்மாவிடம் எப்படி இருக்க என நலம் விசாரிக்கிறார். அதன்பிறகு பெண்மணி ஒருவர் வந்து என் அம்மா எல்லாரும் சந்தோஷமா குடும்பத்தோட வந்து இருக்கீங்க ஆனா இந்த கோவிலுக்கு எதுக்கு வந்தீங்க என கேட்கிறார். இந்த கோவிலுக்கு சண்டையும் சச்சரவுமாக பிரச்சினையாக இருப்பவர்கள் தான் வருவார்கள். நான் இங்க சந்தோஷமா இருக்கீங்களா என கேட்க அப்போது தான் கண்ணம்மாவுக்கு விஷயம் புரிகிறது. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.