இரட்டை குழந்தை பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல முடிவெடுத்துள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 30.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மாமனார் வீட்டில் விட்டு வீட்டுக்கு வந்த கண்ணம்மா தம்முடைய இரட்டை குழந்தை பற்றி யோசிக்கிறார். அங்கே பாரதியின் வீட்டார் அனைவரும் இருவரையும் ஒன்று சேர்ப்பது எப்படி என பேசிக் கொண்டிருக்கின்றனர்.
கண்ணம்மா வீட்டிற்குள் வராமல் சென்றது தனக்கு வருத்தமாக இருப்பதாக மாமனார் கூறுகிறார். அகிலன் அவங்க சொல்வதிலும் சில நியாயம் இருக்கு. பாரதி எவ்வளவு அசிங்கப்படுத்த இருக்கான் என கூறுகிறார். இதையெல்லாம் என்தா ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து சௌந்தர்யா பார்ப்பதை கவனித்ததும் பின்பற்றி எழுந்த உடனே சௌந்தர்யா யாரது மேலே வா என சத்தமிட வெண்பா மேலே வந்து நிற்கிறார்.
எதற்கு ஒட்டு கேட்டுட்டு இருந்தார் எனக் கேட்க நான் கேட்கல.. நீங்க குடும்ப விஷயம் பேசவே நான் அமைதியா அங்கேயே நின்னுட்டேன். அதன் பின்னர் சௌந்தர்யா எதற்கு வந்தாய் என கேட்க அங்கிளுக்கு உடம்பு சரியில்லை என கேள்வி பட்டதும் நலம் விசாரிக்க வந்தேன் என கூறுகிறார். அவரிடம் விசாரித்து விட்டு கண்ணம்மா இங்கே இருப்பதாக சொன்னார்கள் எங்கே கண்ணம்மா உள்ளே இருக்காளா என எனக் கேட்க அதன் பின்னர் சௌந்தர்யா வெண்பாவை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார்.
கண்ணம்மா பாரதிக்கு போன் செய்து உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என நேரில் வருமாறு அழைக்கிறார். முதலில் பாரதி என்னிடம் என்ன பேசணும் என வெறுப்பைக் காட்டிய பின்னர் ஒருவழியாக ஒப்புக்கொள்கிறார். இருவரும் மாலை 4 மணிக்கு பீச்சில் சந்தித்துக் கொள்கின்றனர். கண்ணம்மா தன்னுடைய கர்ப்பத்தில் சொன்ன அதை விடுத்து தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பழைய பாரதி மாமாவிடம் பேச வேண்டும் என கண்ணன் கூறுகிறார். பழைய பாரதி பற்றி பேசுகிறார் கண்ணம்மா. இதைக் கேட்ட பாரதி அப்படின்னா நான் பழைய கண்ணம்மாவிடம் பேச வேண்டும் அவளை வர சொல்லு போ என கூறுகிறார். அதன் பின்னர் ஒருவழியாக கண்ணம்மா எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும் எனக் கூறிவிட்டு நம்முடைய குழந்தையை யாரோ கடத்தி வச்சிக்கிட்டு மிரட்டுறாங்க என கூறுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா எபிசோட்.