வெண்பா செய்த வேலை ஒரு பக்கம் இருக்க கடைசியில் ரோஹித்துக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோகித் அனுப்புடன் வெளியே செல்ல அவர் மீது சந்தேகம் வெண்பா ரோஹித் யார் என்பதை கண்டுபிடித்து கையும் களவுமாக சிக்க வைக்க அவரை பின்தொடர்ந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் வெண்பாவுக்கு போன் கால் ஒன்று வர அது பேசிக்கொண்டு ரோகித் காரை பின் தொடர்வதை தப்ப விட்டு விடுகின்றனர். கார் எந்த பக்கம் சென்றது என தெரியாமல் இவர்கள் ஒரு பக்கம் அலைய ரோஹித் நண்பனை பார்க்க சென்று விட்டார்.
இந்த பக்கம் மருத்துவமனையில் தன்னுடைய பேராசிரியரை பார்க்க சௌந்தர்யா தன்னுடைய மகன் அகிலனை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். பேராசிரியரைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமி ஹேமா என இருவரும் வர ஹேமாவை பாரதியின் மகள் என அறிமுகம் செய்கிறார். ஆனால் லட்சுமியை என்னவென்று அறிமுகம் செய்வது என தெரியாமல் தவிக்க கண்ணம்மா என்னுடைய மகள் என கூறுகிறார். பிறகு இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நண்பனை பார்க்கப்போன ரோகித் அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு அவர் எதையோ சொல்ல தயங்குவதை பார்த்து என்ன விஷயம் என கேட்க காலையில உனக்கு போன் பண்ணி வேற யாரும் லேடிஸ் எடுத்தாங்க என சொல்ல இதைக் கேட்டு ரோஹித் அதிர்ச்சடைகிறார். பிட்டு படம் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.