நடு இரவில் வெண்பாவிற்கு போன் போட்டு வெறுப்பேற்றி உள்ளார் கண்ணம்மா.
Bharathi Kannamma Episode Update 25.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பால்கனியில் கண்ணம்மா லட்சுமி மற்றும் ஹேமா என மூவரும் தூங்கி கொண்டு இருக்கின்றனர். கண்ணம்மா இரண்டு மகள்களுடன் ஒன்றாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறாள். இதற்காகத்தான் இவ்வளவு நாளாக காத்துக்கொண்டிருந்தேன் இந்த இரவை வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கூறுகிறார். அதன்பிறகு வெண்பா தன்னை குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டிருப்பதாக ஏமாற்றி வருவது நினைவுக்கு வர அவருக்கு நடு இரவில் போன் போட்டு வெறுப்பேற்றுகிறார்.
போட்டியில் இருந்து விலகுகிறேன் : ‘டென்னிஸ் சூறாவளி’ ஆஷ்லி பார்ட்டி அறிவிப்பு
பின்னர் மறுநாள் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் விளையாடி உற்சாகம் அடைகிறார் கண்ணம்மா. இந்த நேரத்தில் போட்டோகிராபர் வீட்டிற்கு வருகிறார். அதன் பின்னர் லட்சுமி ஹேமாவிடம் போட்டோ எடுக்கப் போகிறோம் என கூறியதும் இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இருவரையும் தலை வாரி பூ வைத்து அழகு படுத்திய பின்னர் இருவரும் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.
அப்போது ஹேமா கண்ணம்மாவின் மீது கைவைக்க லட்சுமி அதனை தூக்கி எறிகிறார். லஷ்மி கைவைக்க அதனை ஹேமா தூக்கி எறிய என இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. நீ எனக்கு தானே அம்மா அவ எதுக்கு உன் மேல கை வைக்கிற என லட்சுமி கூற கண்ணம்மா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அன்னைக்கே நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி மாதிரி என சொன்னேன். இப்படி எல்லாம் இருந்தா உங்க ரெண்டு பேரையும் சேரவே விடமாட்டேன். ரெண்டு பேரும் சண்டை போட மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுங்க என இருவரிடமும் சத்தியம் வாங்குகிறார் கண்ணம்மா.
Sivakarthikeyan-னின் Doctor படம் லாபம்..ஆனால்? – Nelson-னை திட்டிய Producer K.Rajan
பிறகு அஞ்சலியின் உடம்பை பார்ப்பதற்காக நாட்டு மருந்து கொடுக்கும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அஞ்சலியின் நாடித்துடிப்பை பிடித்து உடல் நலத்தை கணித்த பாட்டி கண்ணம்மா மற்றும் ஹேமாவை உள்ளே அனுப்பிவிட்டு என்னிடம் உடம்புக்கு என்ன பிரச்சனை உண்மையை சொல்லு என அஞ்சலியிடம் கேட்கிறார். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் பயப்படாமல் சொல்லு என கூற அஞ்சலி தன்னுடைய பிரச்சனையை அழுது கொண்டே செல்கிறார். அதன் பிறகு அந்த பாட்டி அஞ்சலியின் மனசை பாராட்டிவிட்டு அவருக்கு நாட்டு மருந்து கொடுத்துவிட்டு செல்கிறார்.