பாரதியை வெண்பா விவாகரத்து செய்ய சொல்கிறார் வெண்பா.
Bharathi Kannamma Episode Update 25.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி கையில் வெண்பா கொடுத்த மாத்திரையை வைத்துக்கொண்டு போடலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார். இந்த மாத்திரையை போட்டால்தான் நெஞ்சு வலி வருகிறது. வெண்பா நமக்கு நல்லது செய்கிற ஆளு கிடையாது. மாத்திரையில் ஏதாவது விளையாடி விட்டாரா என்ற யோசனையில் இருக்கிறார்.
ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!
இந்த நேரத்தில் சௌந்தர்யா அஞ்சலி ரூமிற்கு வருகிறார். கையில் மாத்திரையை வைத்துக்கொண்டே என்ன செய்கிறாய் என தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறார். அதன்பின்னர் 22 மாத்திரைகளாக இருப்பதை பார்த்துவிட்டு யார் கொடுத்த மாத்திரை இது என விசாரிக்கிறார். பாரதி மாமா எழுதிக் கொடுத்தது என கூறுகிறார். 2 மாத்திரையாக எடுக்கச் சொல்லி யார் சொன்னது என கேட்க வெண்பா கூறியதாகக் கூறுகிறார் அஞ்சலி.
Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி
வெண்பா ஒரு அரைகுறை அவ சொன்னதை ஏன் கேட்கிற. ஒருவர் மாத்திரையா எடு போதும் என கூறிவிட்டு இரண்டு மாத்திரையை எடுத்துக் கொண்டு மீதியை அவர் சொல்கிறார் சௌந்தர்யா. அதன் பின்னர் அவர் ஒரு ரூமில் இருந்து வெளியே சென்றுவிடுகிறார். மாத்திரையை போட்ட அஞ்சலிக்கு வழக்கம்போல் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
இந்தப் பக்கம் வெண்பா கண்ணம்மாவின் சொன்னபடி போன் செய்து பேச வில்லை என கோபப்பட்டு அதற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார். வாய்ஸ் மெசேஜை கேட்ட கண்ணம்மா உடனடியாக வெண்பாவிற்கு போன் செய்ய அவர் போனை எடுக்க மறுக்கிறார். மீண்டும் கண்ணம்மா போன் செய்ய போனை எடுத்து எதுவும் கேட்காதது போல நடித்து கட் செய்து விடுகிறார் வெண்பா.
இதனால் கோபமடைந்த கண்ணம்மா நேராக வெண்பா வீட்டிற்குச் சென்று உன்னோட திட்டம் என்ன என கழுத்தை நெறிக்கிறார். அதன் பின்னர் வெண்பா பாரதியை விவாகரத்துச் செய்யுமாறு கூறுகிறார். உன்னை அசிங்கப்படுத்தியவன் தானே? அப்புறம் எதுக்கு விவாகரத்து செய்யாமல் இருக்க. பாரதியை விவாகரத்து செய் உன்னுடைய பொண்ணைப் உன்னிடம் கொடுத்து விடுகிறோம் என கூறுகிறார். கண்ணம்மாவும் சம்மதம் தெரிவித்துவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார்.
இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் அப்டேட். வெண்பா சொன்னபடி விவாகரத்து பேப்பரில் கண்ணம்மா கையெழுத்திடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.