ஹாஸ்பிட்டலில் பாரதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 25.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் வேலை முடித்து கண்ணம்மா வீட்டுக்கு வர அவரை யூனிஃபார்மில் பார்த்து ஆச்சரியப் படுகிறார் லட்சுமி. அதன் பிறகு இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க எங்க அம்மா ஆபீசர் ஆயிட்டேன் நான் எல்லார்கிட்டயும் சந்தோஷமா சொல்லுவேன் என்று கூறுகிறார். பிறகு குமார் மாமா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாரா? சாப்பிட்டியா? ஹேமா சாப்பிட்டாளா? என கேட்க நான் ஒழுங்கா சாப்பிட்டேன் ஆனா ஹேமா தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறா. சமையல் அம்மா வராம நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன் சாப்பிட மாட்டேன் என அழுதுக்கிட்டே இருந்தா என சொல்ல இந்த நேரத்தில் ஹேமா போன் செய்து சமையல் அம்மாவிடம் அழுகிறார்.

என்கிட்ட சொல்லாம என்னை ஏமாத்திட்டீங்க, உங்கள ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் இனிமே நீங்க வராம நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் சாப்பிட மாட்டேன் என அழுதார். கண்ணம்மா அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துவிட்டு ஹேமா அதனை கேட்கவில்லை. பிறகு ஒருவழியாக அவரை ஆறுதல் படுத்துகிறார். கண்டிப்பாக ஒரு நாள் வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறார். ஹேமாவும் ஒரு வழியாக சரியென அமைதியாகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் பாரதி ஹாஸ்பிடலுக்கு நுழைய அப்போது விக்ரம் அவரை சந்தித்து சாப்பிட்டியா என்ன ஏது என கேட்க இன்னும் இல்ல இனிமேதான் ஏதாச்சு ஆர்டர் பண்ணி சாப்பிடனும் என சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் நான் உன்னை ஹல்தியான விலை ரொம்ப கம்மியான ரெஸ்டாரண்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி கேன்டீனுக்கு கூட்டிச் செல்கிறார். அங்கு சாப்பாடு சாப்பிட்டு பாரதி சூப்பர் எனப் பாராட்டுகிறார். இப்படி ஒரு ஐடியா ரொம்ப நல்லா இருக்கு என சொல்ல வீட்டுக்கு காரணம் நான் இல்லை, அட்மினிஸ்ட்ரேட்டர் கண்ணம்மா தான் என கூறுகிறார். பிறகு கண்ணம்மாவை அழைத்து பாராட்ட பாரதி கடுப்பாகிறார்.

விக்ரம் போன் கால் வர எழுந்து சென்றுவிட பாரதியிடம் கண்ணம்மா வேற ஏதாச்சும் சாப்பிடுவீங்களா என்று கேட்டார். என்ன உன்னுடைய மாவையெல்லாம் இங்க வித்துடுறியா என கேட்கிறார். என்னுடைய மாமாவுக்கு மார்க்கெட்ல பெரிய டிமாண்ட் எதுக்கு கேக்குறவங்களுக்கு மாவு கொடுக்க முடியல, இதுல இங்கே எப்படி கொடுக்க முடியும் அதை எல்லாம் இவங்க இங்கேயே அறைக்கிறாங்க என கூறுகிறார்.

பிறகு வெண்பாவை போலீஸ் கோர்ட்டுக்கு கூட்டி வர அவரிடம் சென்று அவருடைய அம்மா அப்பாகிட்ட யோசிச்சு பார்த்தியா நீ சொல்ற பதிலில்தான் கோர்ட்டில் தீர்ப்பு வரும். பாரதியே மறந்துட்டு என்ன பண்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க வாழ்க்கையில் செட்டிலாகுறதா இருந்தா உன்னை இந்த கேசில் இருந்து நிரபராதி என வெளியே கூட்டி வந்தேன்.

அத விட்டுட்டு வா பெரிய தான் கல்யாணம் பண்ணி தேனை உண்ணும் முட்டாள்தனமா அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கும் எத்தனை மாதம், எத்தனை வருஷம் ஜெயில்ல இருக்கணும்னு எனக்கு தெரியாது. களி திண்ணுட்டு வெளியே வா, உனக்கு ஒன்னும் ஜெயில் வாழ்க்கை புதுசு இல்லையே எனக் கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.