அஞ்சலியும் அகிலனும் உயிர் தப்பிய நிலையில் வீட்டில் நடப்பது எல்லாம் பார்த்து அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது.
Bharathi Kannamma Episode Update 24.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி குழந்தையைப் பெற்று மயங்கிய நிலையில் அகிலனும் மயங்கி கிடந்தார். இந்த நேரத்தில் பாரதி சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் அந்த இடத்திற்கு வந்து அகிலன் மயங்கி கிடப்பதை பார்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என தூக்கிக்கொண்டு சென்றனர்.
தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி
பிறகு சௌந்தர்யா அஞ்சலியை தேட கண்ணம்மா கையில் குழந்தையை வைத்திருப்பதை பார்த்து அவர் நிம்மதி அடைந்தார். பிறகு குழந்தையை வாங்கிய சௌந்தர்யா அஞ்சலி மயங்கிக் கிடப்பதை பார்த்தார். பிறகு பாரதி வந்து பல்ஸ் செக் செய்துவிட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூறினார். இருவரையும் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
வெளியில் சௌந்தர்யா அழுது கொண்டிருக்க அப்போது கண்ணம்மா அஞ்சலிக்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது அவள் உயிரை பணயம் வைத்து தான் குழந்தையை சுமந்து இருக்கிறாள் என்ற உண்மையை கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அஞ்சலியின் அப்பாவும் மருத்துவமனைக்கு வந்து விடுகிறார்.
பாரதி உள்ளே சென்று மருத்துவர்களிடம் விசாரித்தபோது அஞ்சலி சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக கூறினர். அதனை அவர் வெளியில் வந்து சொல்ல அனைவரும் கண் கலங்கினர். ஒவ்வொரு முறையும் யாரோ நம்மை விட குடும்பத்து மேல திட்டமிட்டு பழி வாங்கிட்டு இருக்காங்க. முன்னாடி ஹேமாவை கடத்தினார்கள், இப்போ அஞ்சலியை கடத்தி இருக்காங்க. அவங்க யாராக இருக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. இதன் மூலம் வெண்பா சிக்குவாரா என பார்ப்போம். பின்னர் அவர்கள் கண் விழித்து விட்டதாக நர்ஸ் ஒருவர் வந்து கூற அனைவரும் உள்ளே சென்று அவர்களைப் பார்த்தனர்.
கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech
அஞ்சலி தன்னுடைய அத்தை சௌந்தர்யாவிடம் வலி மட்டும் தான் கொஞ்சம் இருக்கு என கூறினார். பிறகு அகிலன் வந்து கண்ணம்மா நீ இல்லனா உன்ன கண்டு பிடித்திருக்க கூட முடியாது என கூறினார். பிறகு நடந்தது என்ன என்பதை கூறினார். வீட்டில் உள்ள அனைவரும் கண்ணம்மாவுக்கு நன்றி கூறினர். அஞ்சலியும் நீ இல்லனா நானும் குழந்தையும் இன்னைக்கு இருந்திருக்க மாட்டோம் என கூறினார்.
பிறகு அஞ்சலி உன் கையால குழந்தையை வாங்கி என்கிட்ட கொடு என கண்ணம்மாவிடம் சொல்ல கண்ணம்மா வாங்கி கொடுத்தார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிகிறது.