ஹேமா சொன்ன வார்த்தையால் கடுப்பாகி உள்ளார் பாரதி.
Bharathi Kannamma Episode Update 24.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கச் சென்ற கண்ணம்மாவை விரட்டி வீட்டுக்கு திரும்ப வைத்தார் வெண்பா. வீட்டுக்கு வந்த கண்ணம்மா கோவிலுக்குச் சென்று தன்னுடைய இரண்டாவது குழந்தையை கண்ணில் காட்டுமாறு கடவுளிடம் வேண்டுகிறார். இதற்காகத்தான் அங்கப்பிரதட்சணம் செய்ய போவதாக கூறி அதனை ஆரம்பிக்கவும் செய்கிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர் ஸ்டாலின்
சௌந்தர்யா இந்த நேரத்தில் இந்த கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுக் கொண்டே இருக்கும் போதே அங்கப்பிரதட்சணம் செய்து வந்த கண்ணம்மா கை சௌந்தர்யா காலின் மீது படுகிறது. இதனையடுத்து சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து உனக்கு என்ன பிரச்சனை என்ன ஏது என்று விசாரிக்கிறார்.
வாழ்க்கையே பிரச்சனை தான் என கண்ணம்மா கூறுகிறார். எல்லாம் என்னுடைய இரண்டாவது குழந்தைக்காக தான் என சொல்கிறார். எனவே குழந்தையை கண்ணில் காட்டும் அவரை நான் ஓயப்பவதில்லை என ஆவேசமாக கூறுகிறார். மேலும் வெண்பா படாதபாடு படுவதை அத்தைக்கு தெரிய வேண்டாம் என மறைத்து விடுகிறார். பின்னர் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா தன்னுடைய கணவரிடம் நடந்ததை கூறுகிறார்.
சுவையான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
இதற்கு முன்னதாக சௌந்தர்யாவின் கணவர் ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாரதி அஞ்சலி என இருவரும் பக்கத்தில் இருக்கின்றனர். அப்போது ஹேமாவிற்கு புரையேற யாரோ உன்னை நினைக்கிறார்கள் என கூறுகின்றனர். அதற்கு ஹேமா வேற யாருமே சமையல் அம்மாதான் என்னை பற்றி நினைப்பாங்க என கூறுகிறார். சமையல் அம்மா என ஹேமா கூறியதும் செம கடுப்பாகிறார் பாரதி. அதை நீ புரிந்து கொண்ட நான் உடனே மன்னிப்பு கேட்க பாரதி அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு என அந்த இடத்தை விட்டு கிளம்பி இருக்கிறார். கோவிலில் அங்கப்பிரதட்சணம் அந்த கண்ணனோ கை கால் வலி யோடு வீட்டில் இருக்க லட்சுமி அவருக்கு மருந்து போட்டு விடுவதாக கூற வேண்டாம் என கூறுகிறார் கண்ணம்மா. என்னுடைய மாமியார் மாதிரி என்னுடைய அத்தை என் காலை பிடிப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.
இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் அப்டேட்.