கண்ணம்மா வீட்டுக்கு வந்த பாரதியை அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
Bharathi Kannamma Episode Update 23.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா எங்கோ வெளியே சென்றிருக்க அந்த நேரத்தில் வந்த பாரதி வீட்டிற்குள் செல்ல முடியாமல் சாவி இல்லாமல் பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள வயதான பாட்டி 4 பேர் மேலே வந்து நீங்க தான் கண்ணம்மா கூட வீட்டுக்காரா. நீங்க டாக்டராமே, நாங்க எல்லாம் இங்க அக்கம் பக்கத்தில இருக்கவங்க எங்களுக்கு கொஞ்சம் வைத்தியம் பாருங்க என கேட்கின்றனர். நான் தான் புருஷனு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கா போல என பாரதி நினைக்க அந்த நேரத்தில் கண்ணம்மா கூட இதை சொன்னது இல்லை என ஒரு பாட்டி கூறுகிறார். அதன்பிறகு பாரதி அந்த பாட்டிகளுக்கு என்ன பிரச்சனை என கேட்டு மருந்து மாத்திரை எழுதிக் கொடுக்கிறார்.
அப்படியே இந்தப்பக்கம் வீட்டில் ஒரே பிரச்சனையா இருக்கு என்ற காரணத்தினால் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து அமரவைத்து ஜோசியர் வருவதை வைத்து என்ன செய்யலாம் என கேட்கிறார். வீட்டிற்கு வந்த ஜோசியர் பிரச்சனையை கேட்டு சத்தியநாராயண பூஜை செய்யலாம் என சொல்கிறார். அதை எந்த நாளில் செய்ய வேண்டும் எனக்கேட்க ஏதாவது ஒரு நாளில் செய்யலாம் என்ன சொல்ல குழந்தைக்கு பேர் வைக்கணும் னு சொல்லிட்டு இருக்குமே அந்த நாள்ல செய்யலாமா என அஞ்சலி ஐடியா கொடுக்க அப்படியே செய்யலாம் என ஜோசியர் கூறுகிறார்.
இந்த பக்கம் கண்ணம்மா ரூமுக்குள் தண்ணீர் எடுத்து வந்து நடுராத்திரில கிச்சன்ல போயிட்டு பாத்திரத்தை உருட்டாதீங்க தண்ணி எங்க இருக்கு என கூறுகிறார். அதன்பிறகு கட்டிலில் ஏறி படுத்துக் கொள்ள நீ எதுக்கு இங்க படிக்கிற வெளியே போ என கூறுகிறார். இது என் வீடு நீங்கள் வேணும்னா வெளியே போய் தூங்குங்க என கண்ணம்மா சொல்ல பாரதி அமைதியாக படுத்து விடுகிறார்.
மறுநாள் காலையில் கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமி பார்க்க ஸ்கூலுக்கு சென்றுள்ளார். சீக்கிரமாக சென்றுவிட்டதால் வகுப்பறையில் இருவரும் என்ன செய்கிறார்கள் என பார்க்கச் செல்கிறார் கண்ணம்மா. அப்போது ஒவ்வொருவராக அழைத்து ஒவ்வொரு டாபிக் பேசச் சொல்கிறார்.
ஹேமா சென்று தனக்கு அம்மா இல்லை. அவங்கள நான் பார்த்ததே இல்லை. அம்மா பாசம்னா எனக்கு என்னனு தெரியாது. கடவுள் என் முன்னாடி கொண்டு நா என் அம்மாவை என்கிட்ட திருப்பி கொடுத்துவிடு என்றுதான் கேட்பேன் என பேசினார். அதன்பிறகு லட்சுமி எங்க அப்பாவ நான் பார்த்ததே கிடையாது. அவர் நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே துபாய் போய்ட்டாரு. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். எங்கம்மா எங்க அப்பாவோட என்ன சேர்த்து வைக்கிறது சத்தியம் பண்ணி இருக்காங்க என பேசுகிறார்.
இதையெல்லாம் கேட்ட கண்ணம்மா கண்ணீர் வடிக்கிறார். உங்க ரெண்டு பேர் சந்தோஷத்தையும் நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை என உறுதி எடுக்கிறார்.
சௌந்தர்யாவிடம் வீட்டில் உள்ளவர்கள் நிகழ்ச்சிக்கான தேதியை குறித்தாச்சா என கேட்க காலண்டரை எடுத்துப் பார்க்க அப்போது அகில் இந்த தேதி ஞாபகம் இருக்கா என கேட்கிறார். அது பாரதி கண்ணம்மாவின் திருமண நாள் என்பதை புரிந்து கொண்ட பிறகு அதே நாளில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவையும் பூஜையும் செய்யலாம் என முடிவெடுக்கின்றனர். நாளைக்கு போய் நான் கண்ணம்மாவை நேரில் பார்த்து அழைத்து விட்டு வருகிறேன் என சௌந்தர்யா கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.