அஞ்சலி உடல்நிலை பற்றி அகிலனுக்கு உண்மை தெரியவர அவரும் கண்ணம்மாவும் கதறி அழுகின்றனர்.

Bharathi Kannamma Episode Update 22.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நீதிமன்றத்தில் பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை பற்றி பாரதியிடம் அவருடைய குடும்பத்தார் பேச அது நடக்கவே நடக்காது என கூறுகிறார். இது நீயா போட்ட கேசு. கோர்ட்டு தீர்ப்பை பின்பற்றித்தான் ஆக வேண்டும் இல்லை என்றால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என குடும்பத்தார் கூறுகின்றனர். பிறகு எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என அங்கிருந்தவர்கள் கிளம்பி விடுகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

நீதிமன்றத்தில் இருந்து நேராக கோவிலுக்கு வந்த கண்ணம்மா கடவுளிடம் கோர்ட்டில் பாரதி தன்னைப்பற்றி தவறாக பேசாமல் இருந்ததற்கு நன்றி கூறுகிறார்.

இன்னொன்று இருக்கும் ஆறு மாத காலத்தில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு கால அவகாசம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நன்றி கூறுகிறார். மூன்றாவதாக இவர்தான் உன்னுடைய அப்பா என லஷ்மிக்கு சொல்ல இன்னொரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நன்றி கூறுகிறார்.

பிறகு வீட்டுக்கு கிளம்பலாம் என நினைக்கும் போது மழை அதிகமாக வருகிறது இதனால் கொஞ்ச நேரம் இருந்து விட்டு செல்ல முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் அங்கே அஞ்சலிக்கு நாட்டு மருந்து கொடுத்த பாட்டியும் இருக்கிறார். பிறகு கண்ணம்மாவை பார்த்ததும் இருவரும் பேசிக் கொள்கின்றனர். இந்த நேரத்தில் அகில் கோவிலுக்கு வருகிறார். பிறகு அவர் அஞ்சலியை தேடி வந்த விஷயத்தை கண்ணம்மாவிடம் கூறுகிறார். அஞ்சலியை காணவில்லை என கேட்டதும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அந்தப் பாட்டி அகிலிடம் அஞ்சலிக்கு இருக்கும் பிரச்சனை பற்றி கூறுகிறார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

அதன் பிறகு மூவரும் சேர்ந்து அஞ்சலியை தேடும் வேலையில் இறங்குகின்றனர். அகில் அஞ்சலி காணாமல் அவளுக்கு இருக்கும் பிரச்சனையை பற்றி தெரிந்ததும் கதறி அழுகிறார். இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அஞ்சலியை கூப்பிட அஞ்சலி கோவிலுக்குச் சென்று திரும்பி வராததும் அகில் தேடிச் சென்று இருப்பதையும் வீட்டு வேலைக்காரர் அம்மா கூறுகிறார். பிறகு அவர்கள் அகிலுக்கு போன் செய்து கேட்க அகில் கோவிலில் தான் இருக்கிறேன் அஞ்சலி உள்ளே இருக்கிறார் என சொல்லி சமாளித்து விடுகிறார்.

அதற்கு அடுத்ததாக கண்ணம்மா நம்ம நேரத்தை தள்ளிப் போடக்கூடாது போலீசில் கம்பெனி கொடுக்கலாம் அல்லது அவளுடைய லொகேஷனை அன்னை கண்டுபிடித்து போகலாம் என கூறுகிறார். பிறகு அந்த பாட்டியின் பேத்தி செல்போன் கம்பெனியில் வேலை செய்வதால் கண்ணம்மா அவரிடம் உதவி கேட்கிறார். அந்தப் பெண்ணும் உதவி செய்வதாக கூறி போன் நம்பரை வாங்குகிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் லோகேஷன் அனுப்புவதாக சொல்லி இருப்பதாக கண்ணம்மா அகிலிடம் கூற அதுவரைக்கும் நாம தேடலாம் என அகில் கூறுகிறார். இந்தப் பக்கம் அஞ்சலி வழியில் துடிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.