வெண்பாவை போலீஸ் கைது செய்த நிலையில் பாரதி எடுத்த முடிவுக்கு சௌந்தர்யா முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
Bharathi Kannamma Episode Update 22.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பாவை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் சௌந்தர்யா இதுக்குத்தான் பிள்ளைகளை அவங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பத்து வருசமா நீங்க எந்த கூட இல்லாததால் அவர் எந்த நிலைக்கு வந்து நிற்கிறானு நீங்களே பாருங்க. இனிமேலாவது அவளை வாழ்க்கை நல்ல வழிக்கு கொண்டு வாங்க என கூறுகிறார்.
அதன் பின்னர் பாரதி பெண் பாவை பார்க்க ஸ்டேஷனுக்கு கிளம்ப அவரை தடுத்து நிறுத்துகிறார் சௌந்தர்யா. வெண்பா என்னோட க்ளோஸ் பிரண்ட் அவளை போய் பார்த்து அவளுக்கு என்ன Help பண்ண முடியுமோ அதை பண்ணப் போகிறேன் என பாரதி சொல்ல விக்ரம் இன்னைக்குத்தான் ஹாஸ்பிடல் விட்டு வந்து இருக்கான் இப்போ நீ அங்க போனா அது நல்லா இருக்காது. அவ சட்டத்தை மீறி தப்பு மேல தப்பு செய்து ஜெயிலுக்கு போய் இருக்கா. நீ அவனுக்கு உதவ போனால் உன்னையும் தப்பா தான் பேசுவாங்க என சொல்லி பாரதியைத் தடுத்து உள்ளே அழைத்துச் செல்கிறார். எல்லாத்தையும் அவங்க அம்மா பார்த்துப்பாங்க என கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக பாரதி உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கண்ணம்மா உள்ளே வருகிறார். நாளைக்கு செட்யூல் போட்டு எடுத்து வந்து இருக்கேன் பார்த்து ஓகேவான்னு சொல்லுங்க கொடுக்கிறார். இதைப் பார்த்த மாதிரி யாராவது மதியம் ஆப்பரேஷன் பிக்ஸ் பண்ணுவாங்களா உனக்கு எல்லாம் யாரு அட்மின் வேலை கொடுத்தது என திட்டி அதனைப் பிடித்துக் கொடுக்கிறார். என்ன தப்புன்னு சொல்லுங்க அதை நான் திருத்துகிறேன் இந்த நாளைக்கு நான் புதுசு தான் ஆனால் கூடிய விரைவில் எல்லாத்தையும் கத்துப்பேன் என கண்ணம்மா கூறுகிறார். அதன்பிறகு கண்ணம்மா விக்ரமை சந்தித்து இன்னைக்கான வேலை முடிந்து விட்டது. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்கு 10 வயசு பேரு லட்சுமி. வீட்டில் நானும் அவளும் மட்டும் தான் இருக்கோம்.
இப்போ வேலைக்கு வந்துட்டேன் அதனால அவ நாலு மணி நேரம் தனியா இருப்பா நான் எழுந்து அவ ஸ்கூல் முடிந்து இங்க வந்து என்னோட இருந்துட்டு வேலை முடிச்சுட்டு போகும் போது நான் கூட்டிட்டு போகிறேன் அதற்கு அனுமதி கிடைக்குமா என கேட்கிறார். விக்ரமம் அதனால் என்ன தாராளமாக வந்து இருக்கட்டும் என சொல்கிறார்.
இந்த பக்கம் வீட்டுக்கு போன ஷர்மிலா விட சாந்தி வெண்பா அம்மா எங்கே எனக் கேட்க போலீஸ் கைது செய்த விஷயத்தை கூறுகிறார். வெண்பா இதுக்கு முன்னாடி ஜெயிலுக்கு போனால் என்ன செய்தால் என்ன பிரச்சனை என கேட்க சாந்தி கருக்கலைப்பு செய்த விஷயத்தை கூறுகிறார். இதைக்கேட்டு ஷர்மிலா அதிர்ச்சி அடைகிறார். ஷந்தி எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வந்துடுங்க நீங்க அவங்க பக்கத்துல இல்லாததால் இப்படி தெரியாமல் தப்பு பண்ணிட்டாங்க. அவங்க பாவம் என கூறுகிறார்.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் உன்ன நான் வெளியே கொண்டு வரேன், ஆனா நான் கை காட்டுற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகணும் என கூறுகிறார். இதைக் கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறாள்.