கண்ணம்மா எடுத்த முடிவால் பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகள் வரத் தொடங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டில் ஏதோ ஒரு யோசனையில் இருக்க அப்போது சௌந்தர்யா, அகிலன் அஞ்சலி மற்றும் டாக்டர் என எல்லோரும் வீட்டுக்கு வருகின்றனர்.
கண்ணம்மாவிடம் ஒரு உதவி கேட்டு வந்திருப்பதாக சொல்ல கண்ணம்மா என்னவென்று கேட்க பாரதியின் பழைய நினைவுகளை வரவைக்க மீண்டும் பழைய விஷயங்களை அதேபோல ரீ கிரியேட் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்ல கண்ணம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். பிறகு அகிலன் அஞ்சலி கணேசன் குழந்தைகள் என எல்லோரும் கண்ணம்மாவிடம் கெஞ்சி கேட்க அவள் சரியென ஒப்புக்கொள்கிறார்.
அதன் பிறகு நீயும் பாரதியும் முதலில் எங்கே சந்தித்தீர்கள் என டாக்டர் கேட்க கண்ணம்மா நடந்த விஷயங்களை கூறுகிறார். அதேபோல் இன்னைக்கு இரவு ரீகிரேட் செய்யலாம் அதற்கான வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்புகின்றனர்.
அடுத்து கண்ணம்மா அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது தாமரை பாவாடை தாவணி பூ உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கண்ணம்மாவிடம் கொடுத்து ரெடியாக சொல்ல இப்போ எப்படி பாவாடை தாவணி கட்ட முடியும் அதெல்லாம் முடியாது என அடம்பிடிக்க பிறகு ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் கண்ணம்மாவை அழைத்துச் சென்று டிரஸ் மாத்தி கூட்டி வந்து மேக்கப் போட்டு விடுகின்றனர்.
அடுத்து சௌந்தர்யா அகிலன், அஞ்சலி ஆகியோர் பாரதியை அழைத்து வந்து ஒரு கோவில் குளத்தின் அருகே உட்கார வைத்துவிட்டு கோவிலுக்கு போவதாக சென்று ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு கண்ணம்மாவை வரவைக்கின்றனர். அதற்கு முன்னதாக அங்கு எதையும் விளக்குகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா வர அவருக்கு பழைய நினைவுகள் வரத் தொடங்குகிறது.
கண்ணம்மா குளத்தில் விளக்கேற்றி விட்டு கிளம்பிச் செல்லும் போது பாரதி கண்ணம்மா என சொல்லி நிறுத்துகிறார் பிறகு கண்ணம்மா திரும்பி பார்க்க பாரதி அருகே வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.