ஒரே பெட்டில் பாரதியின் கண்ணம்மாவும் படுத்து உருண்டு தூங்கியுள்ளனர்.
Bharathi Kannamma Episode Update 18.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி கண்ணம்மா வுடன் ஒரே ரூமில் படுக்க ஓகே சொன்ன நிலையில் கண்ணம்மா ரூமுக்கு சென்று படுக்க போனதும் பாரதி எங்க வர அவங்க சொன்ன ஒரே பெட்ல படுத்து தூங்கணுமா? நீ கீழ படுத்துக்கோ நான் மேல படுத்துகிறேன் என கூறுகிறார். தனது கண்ணம்மா இது நான் காசு கொடுத்து வாங்கின பெட். நீங்க வேணா கீழே படுத்துக்கங்க என கூறுகிறார். என்னது நான் கீழ படுக்கணுமா? நான் யாருன்னு தெரியுமா என கேட்கிறார்.
சென்னையில் கூடைப்பந்துப் போட்டி : தமிழக பெண்கள் அணி முதல் தோல்வி..
உடனே கண்ணம்மா நீங்க சென்னையில் பெரிய டாக்டர், சௌந்தர்யா வேணு ஓட முதல் மகன். எல்லா டெஸ்டும் எடுப்பீங்க ஆனா டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்க மாட்டீங்க என சொல்கிறார். அதன்பிறகு பாரதி கடுப்பாக சரி நான் எதுவும் பேசல என சொல்லிவிட்டு நான் இந்த மூலையில படுத்துகிறேன் நீங்க அந்த மூலையில் படுத்திருகோங்க நடுவுல தலகாணி இருக்கட்டும் என தலையணையை வைக்கிறார். புரண்டு புரண்டு படுக்கிறேன் நீ கைய மேல போட்ட அல்லது தான் என பாரதி சொல்ல நான் ஒரே இடத்துல அப்படியே தான் படுத்து தூங்கிடுவேன் அதை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கோங்க என கூறுகிறார்.
பிறகு நடு இரவில் பாரதி புரண்டு கண்ணம்மா மீது கையை போட்டு கொள்கிறார். அப்படியே பிளாஷ்பேக் காட்சி. பிறகு திடீரென கண்விழித்த பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து படுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து தன்னைத்தானே திட்டிக் கொண்டு திரும்பிப் படுக்கிறார்.
பிறகு கண்ணம்மா தூக்கத்தில் பாரதியின் மீது கையை போட்டு தூங்குகிறார். பிறகு அவரும் விழித்து பார்த்து விட்டு பாரதியின் இடுப்பை கிள்ளி விட்டு திரும்பி படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் சௌந்தர்யா வீட்டுக்கு வந்த கண்ணம்மாவின் அப்பா அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது என சொல்ல சௌந்தர்யா அவரைக் கூட்டிக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்குள் செல்லாமல் வெளியில் நின்று நடப்பதை வேடிக்கை பார்க்கின்றனர். பாரதி ஹாஸ்பிடலுக்கு டைம் ஆகுது சீக்கிரம் சீக்கிரம் என கண்ணம்மாவை சாப்பாடு செய்ய சொல்கிறார். ஒருவழியாக சமைத்து எடுத்து வரும் கண்ணம்மா பாரதி போட்ட சத்தத்தில் அதனை கால்மீது கொட்டிக் கொள்கிறார். உடனே பதறிய பாரதி அவரை உட்கார வைத்து காலில் என்னாச்சு என பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து வெளியில் இருக்கும் கண்ணம்மாவின் அப்பாவும் சௌந்தர்யாவும் சந்தோஷ படுகின்றனர். இதுதான் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.