கோர்ட்டில் பாரதி சொன்ன விஷயத்தைக் கேட்டு மொத்த குடும்பமும் ஷாக் ஆகி உள்ளது.
Bharathi Kannamma Episode Update 18.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் விவாகரத்து வாங்க கோர்ட்டுக்கு சென்று உள்ளனர். கண்ணம்மா இடம் அவருடைய அப்பா உன்னுடைய சித்தி போனவாரம் உன்ன தேடி வந்தாரா எனக் கேட்கிறார். கண்ணம்மா வந்தாங்க அவங்க அன்றில் இருந்து இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்லை என கூறுகிறார். அவள செருப்பால அடிச்சு வெளியே அனுப்ப வேண்டியதுதானே என அவர் அப்பா சொல்கிறார்.
அவங்கள விடுங்கப்பா விவாகரத்து வாங்க தூது அனுப்பி இருக்காரு இந்த மனுஷன் என்ன ஆளு என பாரதியை திட்டுகிறார். இந்தப் பக்கம் பாரதி டீ குடித்துக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர்கள் பிரபல நடிகை ஒருவர் விவாகரத்து செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். நான்கு வருஷமாக நடந்த கேஸ் இன்னைக்கு முடிவுக்கு வருது. உள்ளே தான் அந்த நடிகை இருக்காங்க வெளியே வந்ததும் பேட்டி எடுக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நடிகை வந்ததும் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். இவ்வளவு நாளா இந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வர முடியாமலும் சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இன்னைக்கு தான் இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது என்று கூறுகிறார்.
நீங்க அவரை காதலித்து தான் திருமணம் செய்தீங்க அப்புறம் ஏன் விவாகரத்து என கேட்க அதுதான் நான் செய்த பெரிய தவறு. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் வச்சுக்கிட்டு ஜாலியாக செலவு பண்ணிகிட்டு இருப்பது மட்டுமல்லாமல் நடிகை என்பதால் என்னுடைய நடத்தையை தப்பாக சொல்கிறார். இந்த நேரத்தில் அவருடைய கணவர் வந்து மைக்க பார்த்ததும் வாயை பொளந்துகிட்டு நின்னுடவ போடி என கூறுகிறார். இனி நான் உனக்கு பொண்டாட்டி இல்ல போடி வாடி சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காத என அந்த நடிகை கூறுகிறார். இந்தப் பக்கம் அவளுடைய குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. பாரதி என்ன என கேட்க எங்க அப்பா அம்மா ரெண்டுபேருமே நல்லவங்க தான் அடிக்கடி சண்டை போடுவாங்க. இனி அவங்களோட நான் சேர்ந்து வாழ முடியாது. யாராவது ஒருத்தர் கிட்ட தானே இருக்க முடியும் என அழுகிறது.
யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..
பிறகு மீண்டும் கூடுகிறது நீதிமன்றம். நீதிபதி பாரதியிடம் நீங்கள் ஸ்ட்ராங்காக முக்கிய காரணம் இருப்பதாக சொன்னீங்க அது என்ன எனக் கேட்கிறார். பாரதி என்னுடைய பொண்ணு என்கிட்ட பிரிக்க பார்க்கிறார்கள். இப்போ அவ வாயால எனக்கு சமையல் அம்மாதான் பிடிச்சிருக்கு என சொல்ல வைச்சுட்டாங்க. அதனால் தான் விவாகரத்து கேட்கிறேன் என கூறுகிறார். ஸ்ட்ராங்கான காரணம் இருக்குனு சொன்னீங்களே அது என்ன என்று கேட்க அது இதுதான் என்று பாரதி கூற அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
பின்னர் நீதிபதி கண்ணம்மாவிடம் உங்களுக்கு விவாகரத்து கொடுக்க சம்மதமா என கேட்கிறார். இல்லை என கண்ணம்மா கூறுகிறார். அப்ப அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறீர்களா என நீதிபதி கேட்க அதற்கும் இல்லை என கூறுகிறார். ஏன் விவாகரத்து தர மாட்டேன்னு சொல்றீங்க என கேட்க என் பொண்ணுக்கு அப்பா என்ற உறவு வேண்டும். அதை விவாகரத்து என்ற பெயரில் கத்தரி போட்டு கத்தரித்து விட நான் விரும்பவில்லை என கூறுகிறார். எனக்கு தெரிந்ததெல்லாம் வீடு குடும்பம் அவ்வளவுதான். ஆனால் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துவிடும் என நான் எதிர்பார்க்கல. எது வேணாலும் நடக்கலாம் அதை எதிர்த்துதான் ஆகவேண்டும் என்ற மனநிலையை நான் உருவாக்கிக் கொண்டேன் என கூறுகிறார். பின்னர் எதுக்கு வீட்டை விட்டு வெளியே வந்தீங்க மாமியார் கொடுமையா என கேட்க என் மாமியார் எனக்கு அம்மா மாதிரி என கண்ணம்மா கூறுகிறார்.
அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி
பிறகு சௌந்தர்யாவை அழைத்து நீதிபதி விசாரணை செய்கிறார். கண்ணம்மா பற்றி நீதிபதி கேட்க அவர் அவரை புகழ்ந்து பேசுகிறார். பிறகு ஏன் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என கேட்க எவ்வளவோ முறை நான் கூப்பிட்டு விட்டேன். அவர்தான் வர மாட்டேங்குற என சொல்கிறார். பின்னர் உங்க பையனிடம் பேசினீங்களா என கேட்க என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீங்க என சொல்லிவிட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும் என கதறி அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.