நீங்க சொல்ற காரணத்துக்காக விவாகரத்து தர முடியாது என்று பாரதிக்கு நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது.
Bharathi Kannamma Episode Update 16.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. விவாகரத்து கேட்டு பாரதி கோர்ட்டுக்கு போன நிலையில் கண்ணம்மாவின் பெயர் மூன்று முறை உச்சரிக்கப்படுகிறது.
லேட்டாக வந்தாலும் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் கண்ணம்மா. பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். பாரதியிடம் உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடம் ஆச்சு என கேட்க நாள் கிழமையுடன் சரியாக சொல்கிறார். எத்தனை வருடம் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேட்டதற்கும் அதற்கும் நாள் கிழமையுடன் சொல்கிறார்.
ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்
அப்போது எவ்வளவு நாள்தான் சேர்ந்து வாழ்ந்து விட என கேட்க கண்ணம்மா கரெக்டாக நாட்களின் எண்ணிக்கையோடு கூறுகிறார். ரெண்டு பேரும் தனித்தனியா தான் வாழுறீங்களா இல்ல சேர்ந்து வாழறீங்களா? எனக் கேட்க தனித்தனியா தான் வாழ்கிறோம். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் என கேட்க இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். நல்லபடியாகவும் பேசுவோம், சண்டை போட்டுக் கொள்வோம்.
மேலும் நீதிபதி உங்களுக்கு குழந்தை இருக்கா என கேட்க ஒரு பெண் குழந்தை இருக்கு என கூறுகிறார் கண்ணம்மா. பாரதியின் எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்று கேட்க அது எப்படி என நீதிபதி கேட்கிறார். ஒரு ஆதரவற்ற பெண்ணை தத்தெடுத்து வளர்ப்பதாக பாரதி கூறுகிறார். உங்களுடைய வழக்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதாக நீதிபதி கூறுகிறார்.
இத்தனை வருடம் இல்லாமல் மனைவியை விவாகரத்து செய்ய என்ன காரணம் என நீதிபதி கேட்க என்னுடைய குழந்தைகிட்ட அதிகம் பாசம் காட்டி என்கிட்ட இருந்து பிரித்து விடுவார்களோ என்று பயமாய் இருக்கு என கூறுகிறார். இதற்காக எல்லாம் விவாகரத்து தர முடியாது என நீதிபதி கூறுகிறார்.
மேலும் என்னிடம் ஸ்ராங்கான காரணம் இருப்பதாக பாரதி கூறுகிறார். 20 நிமிடத்துக்கு பிறகு இந்த வழக்கு தொடரும் என நீதிபதி கூறுகிறார்.
Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.!
கண்ணம்மா வெளியில் அவருடைய அப்பா அழுது கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் கூறுகிறார். எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என சொல்கிறார். இதன் அருகில் பாரதி வந்து இருவரும் எதிர் எதிராக நின்று முறைத்து கொள்கின்றனர். இன்னைக்கு விவாகரத்து வாங்காமல் வீட்டுக்கு போக மாட்டேன் என பாரதி மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். என்ன ஆனால் விவாகரத்து கொடுக்க சம்மதிக்க மாட்டேன் என கண்ணம்மா கூறுகிறார்.
மேலும் தன்னுடைய அப்பாவிடம் அவர் என்னுடைய கேரக்டரைப் பற்றி தப்பாக பேசினால் நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன் என கண்ணம்மா சொல்கிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.