தீவிரவாதிகள் மயங்கி விழ பாரதி செய்த வேலையால் தீவிரவாதிகள் கொலைவெறி முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் செல்வம் கண்ணம்மா மற்றும் பாரதியை பார்த்து நீங்கள் சொன்ன சர்ப்ரைஸ் இதுதானா? என்ன நீங்க இப்படித்தான் போலீஸ்ல புடிச்சு கொடுத்தாலும் எப்படி எனக்கு வெளியே வரவேண்டும் என்று தெரியும் என சொல்ல கண்ணம்மா திரும்பவும் ஜெயிலுக்கு தான் போகப் போற என ஆவேசமாக பேசுகிறார்.

பிறகு பாரதி அங்கிருப்பவர்களிடம் ரகசியமாக தண்ணீரில் செலரின் கலந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு அந்த தண்ணீரை குடித்த தீவிரவாதிகள் ஒவ்வொருத்தராக மயங்கி விழ பாரதியும் அகிலும் சேர்ந்து அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வெளியே சென்று வெளியே செல்வதற்கு வழி ஏதாவது இருக்கா என ஆராய்ச்சி செய்கின்றனர்.

இந்த விஷயம் தீவிரவாத தலைவருக்கு தெரிய வர பிறகு அவர்கள் பாரதி மற்றும் அகிலை அடித்து துப்பாக்கியால் சுட முயற்சி செய்ய வெடிகுண்டு சத்தம் கேட்டு அனைவரும் பதறுகின்றனர். வெளியில் போலீஸ் அதிகாரி போன் போட்டு என்ன சத்தம் என கேட்க பாரதி செலரின் கலந்து தீவிரவாதிகளை மயங்க வைத்த விஷயத்தை சொல்கிறார்.

அடுத்து தீவிரவாதிகள் மக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கும் இடத்திற்கு சென்று லட்சுமி தலையில் துப்பாக்கியை வைத்து கொன்று விடப் போவதாக மிரட்டுகின்றனர். கடைசியில் இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங், இனிமே இப்படி பண்ண கூடாது என சொல்லி லட்சுமியை விட்டு விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.