அமைச்சரை காப்பாற்றிய கையோடு பாரதி தீவிரவாதிகளுக்கு எதிராக வேலை ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஒரு பக்கம் தீவிரவாதிகள் குழந்தைகளின் தலையில் துப்பாக்கி வைத்து ஆபரேஷன் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பக்கம் பாரதி அமைச்சருக்கு தொடர்ந்து பல்ஸ் ரேட் குறைந்து கொண்டே வரும் நேரத்தில் ஒரு இன்ஜெக்ஷன் ஒன்றை போட மீண்டும் அவருடைய பல்ஸ் நார்மலுக்கு வருகிறது. தீவிரவாதிகள் அமைச்சரின் நிலை மோசமான கண்டிஷனை இருப்பதாக சொல்ல தீவிரவாத குழுவின் தலைவர் குழந்தையின் தலையில் துப்பாக்கி வைக்க சொல்லி கவுண்டவுன் சொல்கிறார்.
கண்ணம்மா நான் கீழே போய் ஆபரேஷன் சக்சஸ் என சொல்லிவிட்டு வருகிறேன் என ஓடிவந்து சரியான நேரத்தில் நிறுத்துங்க அமைச்சருக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சி அவர் உயிர் பிழைத்து விட்டார் என சொல்ல தீவிரவாதிகள் அதை உறுதி செய்த பின்னர் லட்சுமியை விட்டு விடுகின்றனர். அடுத்ததாக பாரதி ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்து தண்ணீர் குடிக்க போவது போல சென்று அங்கே இருந்த வாட்டர் கேனில் மயக்க மருந்தை கலக்கிறார்.
அடுத்ததாக உள்ளே வந்து ஹேமாவை பார்த்து நீ எப்படி இங்கு வந்தாய் என கேட்க சாப்பாடு வண்டி ஒன்னு இருந்தது. அதில் ஏறி மறைந்து உள்ள வந்துட்டேன் என சொல்கிறார். இந்த பக்கம் ரோஹித் வெண்பா மகா சங்கமம் என்று எழுதிய கேக்கை வாங்கி வர ஷர்மிளா அப்படின்னா என்ன என்ன கேட்க அது பர்சனல் என சொல்லி விடுகிறார். அடுத்து இருவரும் சேர்ந்து கட் செய்ய வெண்பா மறுக்கிறார். கேட் கட் பண்ண வரவில்லை என்றால் அன்னைக்கு நடந்து விஷயத்தை சொல்லி விடுவேன் என ரோகித் மிரட்ட பிறகு வெண்பா ரோஹித்துடன் சேர்ந்து கேக்கை வெட்டுகிறார்.
அடுத்து உனக்கு ஒரு கிப்ட் என சொல்லி சரக்கு பாட்டில் கொடுக்க வெண்பா கடுப்பாகிறார். இந்த பக்கம் தீவிரவாதிகள் போலீசுக்கு போன் போட்டு அமைச்சர் பிழைத்துக் கொண்டார் என சொல்கின்றனர். அடுத்ததாக இன்னும் ஒரு மணி நேரத்தில் செல்வம் வெளியே வரவேண்டும் என கேட்கின்றனர். அதற்கு பதிலாக பாரதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களோடு 10 பேரை வெளிய அனுப்ப வேண்டும் என போலீஸ்காரர் கேட்க அதற்கு தீவிரவாதிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். நானே யார் அனுப்பனும்னு முடிவு பண்ணி 10 பேர வெளிய அனுப்புறேன். அதில் பெண்கள், குழந்தைகள் இருப்பாங்க இதை மட்டும் தான் உறுதியாக சொல்ல முடியும் என தீவிரவாதி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.