ஆட்டோவில் ஆண் நண்பருடன் கண்ணம்மா செல்வதை பார்த்த பாரதி கையும் களவுமாகப் பிடிக்க போய் கடைசியில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 11.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி காரில் சென்று கொண்டிருக்க அப்போது அவரை கிராஸ் செய்து ஆட்டோ ஒன்று செல்கிறது. அந்த ஆட்டோவில் கண்ணம்மா யாரோ ஒரு ஆண் நண்பருடன் சிரித்துப் பேசிக் செல்வது போல இருக்கிறது. இதனைப் பார்த்து பாரதி இன்னைக்கு உன்ன கையும் களவுமா பிடிக்கிறேன். வீட்டில் அப்பாவி மாதிரி இது விட்டு வெளியில கண்டவனோட சிரிச்சு பேசிட்டு போற என அந்த ஆட்டோவை பின் தொடர்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆட்டோ நின்று ஆட்டோவிலிருந்து கண்ணம்மா என்ற பாரதி ஓடிப்போய் ஆட்டோவின் உள்ளே பார்க்கிறார். அங்க போய் பார்த்தால்தான் தெரிகிறது உள்ளே இருந்தது ஒரு பெண்தான். ஆண் போல ஹேர் கட் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததால் பாரதி அவரை தப்பாக நினைத்து உள்ளார். பிறகு அந்தப் பெண்மணியை கண்ணம்மா தன்னுடைய படைத்தவர், பெயர் அர்ச்சனா என அவரை அறிமுகம் செய்து வைக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த பாரதி ஒரே குழப்பத்தில் இருக்கிறார். இதுவரைக்கும் கண்ணம்மாவை நா மட்டும்தான் தப்பானவள் என சொல்லிக்கிட்டே இருக்கேன். ஆனா அவளை சுற்றி இருக்கிறார்கள் யாரும் அவளை அப்படி தவறாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஒருவேளை நான் தான் தப்பான எண்ணத்தை வளர்த்து வைத்திருக்கிறேனோ என்று குழம்புகிறார். பிறகு டாக்டர் ஒருவர் கோவில் பற்றிய தந்ததே ஞாபகத்திற்கு வந்து அவருக்கு போன் செய்து நானும் அந்த கோவிலுக்கு வந்து பொங்கல் வைக்கலாம் இருக்கிறேன் என சொல்ல கண்டிப்பா வாங்க என அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் அகிலன் காயங்களுடன் இருக்க அவருக்கு மருந்து போட்டு எதற்கு இப்படியான பண்ணிட்டு இருக்க என்று அஞ்சலி கேட்க எனக்கு சின்னதா இப்படி அடிபட்டதற்கு எல்லாரும் இப்படி பதறுறீங்களே அன்னைக்கு உனக்கு அவ்வளவு பெரிய ஆபத்து வந்தபோது எனக்கு இப்படித்தான் இருந்திருக்கும் என கூறுகிறார். சும்மா நமக்கு பிடிச்சவங்க கிட்ட அன்பா பேசறது மட்டும் காதல் இல்லை அவர்களுக்கு ஒரு ஆபத்துன்னா உயிரை கொடுத்து காப்பாத்தணும் அதுதான் எனக்கு தெரிஞ்சி உண்மையான காதல் என அகிலன் கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி ஒரே குழப்பத்தில் இருக்க அந்த நேரத்தில் வந்த வாய்தா வடிவுகரசி நீங்களும் நல்லவர் கண்ணம்மாவும் நல்லவர் உங்களுக்கிடையே தவறான எண்ணங்கள் தான் உங்களை இப்படி பிரித்து வைத்திருக்கிறது. தன் அம்மாவுடன் சேர்ந்து வாழ நீங்கள் இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அப்போதுதான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என கூறுகிறார்.

பிறகு பாரதி மருத்துவமனை கேட்கலாம் பேர் கண்ணம்மா அவருக்கு லஞ்ச் பேக் செய்து கொடுக்கிறார். மேலும் பாரதி கண்ணம்மா என அழைத்து ஷாக் கொடுக்கிறார். நாம ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாமா என கேட்கிறார். கண்ணம்மாவின் சரி போகலாம் ஆனா நாம ரெண்டு பேர் மட்டும் வேண்டாம் வீட்ல இருக்க எல்லாரும் போகலாம் என கூறுகிறார். சரி நீயே போன் பண்ணி சொல்லிரு என பாரதி சொன்ன இல்ல நீங்களே நேரில் போய் கூப்பிடுங்க ரொம்ப சந்தோஷப் படுவார்கள் என சொல்ல பாரதியின் சரி நான் போகும்போது வீட்டிற்குப் போய் அம்மாவிடம் சொல்லி விட்டு போகிறேன் என கூறுகிறார்.

இவருக்கு என்ன ஆச்சு இன்னைக்கு நீ ரொம்ப சாந்தமாக பேசுறாரு கோவிலுக்கு போகலாம் என்று கேட்கிறார் இதெல்லாம் நிஜமாகவே என தெரியவில்லை என்று கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.