விவாகரத்து நோட்டீஸோடு பாரதி வீட்டுக்கு போன கண்ணம்மாவால் குடும்பத்தார்க்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 10.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நான் கண்ணம்மாவை விவாகரத்து செய்யப் போவது உறுதி. நான் நிம்மதியாக தூங்கி எட்டு வருசம் ஆச்சு. இனிமே நானும் அவளோடு சேர்ந்து வாழுற மாதிரி இல்ல அவளுக்கும் அந்த எண்ணம் இல்லை. அவ என்னுடைய ஹேமாவை என்கிட்ட இருந்து பிரித்து விடுவாளோனு பயமா இருக்கு. தனித்தனியாக பிரிந்து இருக்காங்க ஒரேடியா பிரிந்துவிடலாம்னு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கேன்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

கண்ணம்மாவுக்கு உதவி செய்கிறேனு நீங்க எதுவும் செய்யக்கூடாது என தன் மீது சத்தியம் வாங்கிக் கொள்கிறார் பாரதி. உங்களுக்கும் எனக்கும் இடையே நிறைய இடைவெளி வந்திடுச்சு. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா பேசி ரொம்ப வருஷம் ஆகுது. நம்ம பேசினாலே சண்டைன்னு ஆகிடுச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த கண்ணம்மா தான். அவ நமக்கு வேண்டாம். இனி நாம எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா சந்தோஷமா இருப்போம் என சௌந்தர்யாவிடம் கூறுகிறார்.

சவுந்தர்யா பாரதிக்கு ஆறுதல் சொல்லிய பிறகும் கண்ணம்மா என் கிட்ட இத பத்தி கேட்டா நான் என்னன்னு சொல்றது என சௌந்தர்யா புலம்ப பாரதி இப்பவும் நீங்க என் பக்கம் இல்லை என நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதில் நான் உறுதியா இருக்கேன் என கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் 

இந்தப்பக்கம் கண்ணம்மா லட்சுமி அப்பாவுக்காக ஏங்கிட்டு இருக்கா. அவளை எப்படியாவது அவங்க அப்பாவோட சேர்த்து வைத்து விடணும் என நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமா முடித்துவைக்க விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வச்சிருக்காரு. இப்போ நான் என்ன பண்ணுறது? எனக்கு அவரோட சேர்ந்து வாழனும்னு ஆசை இல்லை ஆனால் என்னுடைய பொண்ணுக்கு அப்பான்னு அவர் இருக்கணும். என்ன நடந்தாலும் சரி நான் அவருக்கு விவாகரத்து கொடுக்கப் போவதில்லை என முடிவெடுக்கிறார் கண்ணம்மா.

இந்த பக்கம் வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து பாரதி கண்ணம்மாவுக்கு உதவி எதுவும் பண்ண கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை எண்ணி கவலைப் படுகின்றனர். இந்த நேரத்தில் வீட்டு வேலைக்காரம்மா ஓடி வந்து அம்மா ஒரு நிமிஷம் வெளியே வந்து பாருங்க என அழைக்கிறார். சௌந்தர்யா எதற்கு எனகேட்க கண்ணம்மா அம்மா வந்து வெளியே உட்கார்ந்து இருக்காங்க எனக் கூற அனைவரும் வெளியே ஓடிச் செல்கின்றனர்.

அனைவரும் சென்று கண்ணம்மாவை உள்ளே அழைக்க தனியா வாழ்ந்துட்டு இருந்தாலும் இதுவரைக்கும் ஏதோ ஒரு உணர்வு மூலமா இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு இருந்தேன். இனி எந்த உணர்வோடு இந்த வீட்டுக்குள்ள வரது என கூறுகிறார். பாரதியின் அப்பா உனக்கு நான் மாமா, உங்க அத்தை சௌந்தர்யாவுக்கு பெறாத பெண்ணா உள்ள வா என சொல்கிறார். என்னுடைய அக்காவா உள்ளே வா என அஞ்சலி அழைக்கிறார். பிறகு கண்ணம்மா உள்ளே சென்று அமர்கிறார். அகிலன் பாரதி ரூமிற்கு சென்று கதவை சாத்தி வெளியே பூட்டு போடுகிறார்.

பிறகு கண்ணம்மா அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எட்டு வருஷமா பிரிந்து தானே இருக்கோம் இப்ப எதுக்கு இந்த நோட்டீஸ். எனக்கு அவர் இல்லாமல் எப்படி வாழணும்னு தெரியும். என் பொண்ணு என்ன தப்பு பண்ணா? லட்சுமிக்கு அப்பா வேணும் ஹேமாவுக்கு அம்மா வேணும். இதை பத்தி ஒரு நிமிஷமாச்சு நீங்க நினைச்சு பார்த்தீர்களா என கேட்க பாரதி சத்தியம் வாங்கியது குறித்து சௌந்தர்யா கூறுகிறார். பிறகு கண்ணம்மா என்ன நடந்தாலும் சரி நான் பாரதிக்கு விவாகரத்து கொடுக்கப் போவதாக இல்லை. எனக்கு அவர் புருசனாக இல்லை என்றாலும் என்னுடைய குழந்தைகளுக்கு அப்பாவாக அவர் இருக்க வேண்டும். அந்த உரிமையை என்னால் பறிக்க முடியாது என கூறுகிறார். கண்ணம்மாவின் முடிவைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நான் இங்க வந்து அழுதுட்டு போக வரல என்னுடைய முடிவை சொல்லிட்டு போக வந்தேன் என கூறுகிறார் கண்ணம்மா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.