Bharathi Kannamma Episode Update 10.09.21

துளசியிடம் ஹேமா பற்றிய ரகசியத்தை பேசிக்கொண்டிருக்க பாரதி கையில் மாட்டிக் கொள்கிறார் சௌந்தர்யா.

Bharathi Kannamma Episode Update 10.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா தன்னுடைய மகள் என கண்ணம்மாவுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சௌந்தர்யா இது குறித்து நிச்சயம் துளசியிடம் கண்ணம்மா கேட்பார் என துளசி சந்தித்து உண்மையை சொல்லாதே என கூறுகிறார்.

இது சந்திப்பின் போது பாரதி அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். கண்ணம்மா தோழியோட சௌந்தர்யாவுக்கு என்ன சந்திப்பு என பாரதி யோசிக்கிறார். பாரதியை கவனித்த சௌந்தர்யா அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுகிறார்.

இதனையடுத்தே கண்ணம்மா ஹேமா குறித்து தெரிந்துகொள்ள அஞ்சலிக்கு போன் செய்து விசாரிக்கிறார். அஞ்சலி அத்தை ஹேமாவை தத்தெடுத்து தான் வந்தாங்க என சொல்கிறார். மேலும் இதுகுறித்து என் கண்ணம்மா கேட்கிறார் என கேட்டதற்கு இல்ல சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன் என கூறி ஒரு போனை வைத்து விடுகிறார் கண்ணம்மா.

விநாயகரை நீரில் கரைப்பது ஏன்? புராண விளக்கம்

துளசியிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாரதி பார்த்ததை நினைத்து பயத்தில் தவிக்கிறார் சௌந்தர்யா. இந்த நேரத்தில் ஆகியன கண்ணம்மா அண்ணி அஞ்சலிக்கு போன் செய்து ஹேமா பற்றி விசாரித்ததை கூறுகிறார். அஞ்சலிக்கு உண்மை தெரியாது என்பதால் அவ ஹேமா தத்து எடுத்து வந்த குழந்தை என கூறி விட்டதாக கூறுகிறார்.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

அந்த பக்கம் கண்ணம்மா துளசிக்கு போன் செய்து உன்னிடம் ரெண்டு நிமிஷம் பேசணும் என கூறிவிட்டு மருத்துவமனைக்கு செல்கிறார். இங்கு துளசி பார்த்தது இது குறித்து கேட்க துளசி எனக்கு தெரியாது. நான் வேற வார்டுல டியூட்டில இருந்தேன் என கூறி சமாளிக்கிறார் துளசி. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் அப்டேட்.