உண்மையை கண்டுபிடிக்க பாரதி அதிரடியான முடிவு ஒன்றை எடுக்க உள்ளார்.

Bharathi Kannamma Episode Update 10.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா மீன் குழம்பு வைத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மேலே வந்த வாய்தா வடிவுகரசி அன்னைக்கு சொன்ன கதையை மீதி கதையை சொல்லு என கல்யாண நாள் கொண்டாட்டம் பற்றி கேட்கிறார்.. அன்னைக்கு ஏதோ நீங்க கேட்டீங்கன்னா சொன்னேன் திரும்பவும் எதுக்கு காது என அம்மா கேட்ட பரவால்ல சொல்லு என்று கூறுகிறார்.

அதன்பிறகு கண்ணம்மா மீண்டும் பழைய கதையை கூறுகிறார். சௌந்தர்யா இவர்களுக்கு கிப்ட் கொடுத்ததையும் துப்பாக்கி படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் கடைசியில் பிரிவியூ தியேட்டரில் நாங்க இருவர் மட்டும் சென்று படம் பார்த்தோம். கண்ணம்மா பாரதியிடம் மாமா இந்த பார்சன் குறைந்துவிடாது இல்லை எனக் கேட்க எதுக்கு இப்படி கேக்குற இன்னொருமுறை இப்படி கேட்டா நீ நான் வச்சிட்டு இருக்க பாசத்தை கொச்சைப்படுத்துற மாதிரி என சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்டு கண்ணீர் வடிக்கும் வாய்தா வடிவுக்கரசி சீக்கிரம் உன்னுடைய வாழ்க்கையில் வசந்த காலம் பிறக்கும் என கூறுகிறார். இந்தப் பக்கம் வெண்பா மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டதை சாந்தியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணமான கண்ணம்மாவை சும்மா விடமாட்டேன் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பேன் என கூறுகிறார். இந்த நேரத்தில் மாயாண்டி ஓடிவந்து அஞ்சலியை கடத்தியவர்களை போலீஸ் கைது செய்து விட்டதாக கூறிய வெண்பாவிற்கு இன்னும் அதிர்ச்சி. ஆனா யாரும் எதுவும் சொல்லல பணத்துக்காகவும் நகைகளுக்காவும் தான் கடத்தியதாக சொல்லி விட்டார்கள் என கூறுகிறார்.

பிறகு அகிலன் காயங்களோடு வீட்டிற்குச் செல்ல அனைவரும் பாதிப்பை என்னாச்சு என கேட்கின்றனர். அஞ்சலியை கடத்திய கும்பலை கண்டுபிடித்து விட்டேன். பணத்துக்காகத்தான் கடத்தியதாக சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்க நம்ப முடியவில்லை என கூறுகிறார். ‌‌ ‌‌

இந்தப் பக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க அப்போது வந்த டாக்டர் ஒருவர் சொத்து பிரச்சினை காரணமாக எங்க ஊருக்கு சென்று நீதி காக்கும் தேவி கோவிலுக்குச் சென்று பொங்கல் வைக்கப் போவதாகவும் அந்த கோவிலில் பிரச்சனையோடு இருப்பவர்கள் வந்து பொங்கல் வைத்தால் யாருடைய பொங்கல் முதலில் பொங்குகிறது அவர்கள் பக்கம்தான் நீதி இருக்கிறது என தெரிந்து விடும் அந்த அளவிற்கு சக்தியான அம்மன் அது என கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட பாரதி இந்த கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கலாமா என்பது குறித்த யோசனையில் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.