கண்ணம்மாவை விட்டு நிரந்தரமாகப் பிரிய பாரதி கொடுத்த ஆஃபரை கேட்டு கண்ணம்மா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Bharathi Kannamma Episode Update 08.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மி ஹேமாவை பார்த்து விட்டு நேராக மோர் கடைக்கு வண்டியை விடுகிறார் பாரதி. மோரை வாங்கி ரசித்து ருசித்து கொடுக்கிறார். காருக்குள் இருந்து கண்ணம்மா நாமளும் கொடுத்திருக்கலாமோ வேணாம்னு சொல்லிட்டு இறங்கிப் போனா நல்லா இருக்காது என நினைத்துக் கொண்டிருக்கிறார். வெளியே பாரதி அவ்வளவு ஆசையா இருக்கவே இறங்கி வந்தா என்ன குறைந்தா போயிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி
கடைசியில் பாரதி ஒரு டம்ளர் மோர் வாங்கிக் கொண்டு தன் அம்மாவிடம் கொடுக்கிறார். கண்ணம்மா வேண்டாம் என்று சொல்ல கண்ணாலேயே பார்த்து பாதி குடித்துவிட்டு குடி இல்லனா எனக்குத்தான் வயிறு வலிக்கும் என கூறுகிறார். மோரை வாங்கிக் கொண்ட கண்ணம்மா அதை குடிக்க பாரதி எப்படி இருக்கு என கேட்கிறார். சூப்பரா இருக்கு நீங்க அடிக்கடி வந்து நீங்க குடிப்பீங்களா என கேட்கிறார். இல்ல இந்த பக்கம் வந்தா கண்டிப்பா குடிப்பேன் மனசுக்கு இதமா இருக்கும் என சொல்கிறார். எனக்கும் இந்த மாதிரி எல்லாம் போர் போட தெரியும் என கண்ணம்மா அப்படியா அப்ப அந்த பக்கம் ஒரு கடையை போட்டுடு என நக்கல் அடிக்கிறார். பிறகு இருவரும் தனித்தனியாக காசு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மறுநாள் காலையில் கண்ணம்மா எழுந்து இட்லி தோசை மாவு அரைத்து கொண்டு இருக்கிறார். கடைக்காரர் வேற போன் செய்து இன்னும் மாவு வரவில்லை என கேட்கிறார். இந்த நேரத்தில் வெளியே எழுந்து வந்த பாரதி இவ எப்ப எழுந்தா என யோசிக்கிறார். பிறகு கண்ணம்மா காபி போட்டு வச்சிருக்கேன் பாரு போய்க் கொடுங்க என கூறுகிறார். மோர் ரொம்ப நல்லா இருந்துச்சு இதுவரைக்கும் நான் அப்படி குடித்ததே இல்லை என சொல்கிறார்.
பாரதி மனதுக்குள் டேய் பாரதி நீ இங்க எதுக்கு வந்துருக்க அவர் கஷ்டப்படுறது எல்லாம் பார்த்து பலர் எல்லாம் மறந்து விடுவாய் போல. அவ உனக்கு துரோகம் பண்ணவ, மறந்துடாத. 6 நாள்ல இங்கிருந்து கிளம்பி பாரு என மனதுக்குள் பேசிக் கொள்கிறார். பிறகு உள்ளே சென்று விட்டு முகத்தை அலம்பிக் கொண்டு வருகிறார். அப்போது கண்ணம்மா காபி எடுத்து வந்து கொடுக்கிறார். பாரதி காபி குடித்துக்கொண்டே நீ எத்தனை மணிக்கு எழுந்த என கேட்க அஞ்சரை மணிக்கு எனக் கூறுகிறார். பிறகு இவர் கஷ்டத்தை கேட்டினா மனசு மாறிடுவ, வாய வச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டியா என மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசி விடுகிறார். கண்ணம்மா என்ன சொன்னீங்க என கேட்க பாரதி ஒன்றும் இல்லை என்று கூறி சமாளித்து கொள்கிறார்.
Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்
பிறகு உனக்கு ஒரு ஆஃபர் தரேன் என் அம்மாவிடம் சென்று உனக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு ஆகும் எனக்கேட்டு 25 ஆயிரம் என கூறுகிறார். உன் பொண்ணோட படிப்பு செலவுக்கு மாசம் மாசம் நான் பணம் கொடுத்து விடுகிறேன். என்னோட குடும்ப செலவுக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன் மொத்தமாக மூன்று கோடி செட்டில் செய்கிறேன். ஆனால் நீ என்ன விட்டு கண்காணாத இடத்துக்கு போயிடு நீயும் என்ன பார்க்க வேணாம் நானும் உன்னை பார்க்கமாட்டேன். பாரதி சொன்னதை கேட்ட கண்ணம்மா டீல் ஓகே ஆனா ஒரு கண்டிஷன் உன்னோட புருஷனாக தரேன்னு சொல்லி பத்து ரூபாய் கொடுங்க போதும் என கூறுகிறார். சீ போடி என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி.
கோவத்துல பாத்ரூம்ல போயிடாதீங்க பெனாயில் ஊத்தி வச்சிருக்கேன் வழுக்கி விழுந்து விடுவீர்கள் என கண்ணம்மா கூறுகிறார். ஆனால் இதை காதில் வாங்காமல் போன பாரதி கண்ணம்மா சொன்னபடி வழுக்கி விழுகிறார். பிறகு கண்ணம்மா ஓடிச்சென்று பாரதியை தூக்குகிறார். அவர் கையிலிருந்த மாவு முழுவதும் அவர் முகம் சட்டை என அனைத்திலும் படுகிறது. பாரதி எடுக்கும்போது மீண்டும் இருவரும் வழுக்கி விழ அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு பாரதி கையை எடுடி முகத்துலயே தோசை சுட்டுடுவா போல என திட்டுகிறார்.
இந்த பக்கம் ஹேமாவும் லட்சுமியும் பள்ளிக்கு தயார் ஆகி விட்டு அமர்ந்து கொண்டே அம்மா அப்பாவை மிஸ் செய்வதாக சொல்ல லட்சுமி அம்மாவை மிஸ் செய்வதாக கூறுகிறார். எங்க அப்பா இல்லாம நான் தூங்க மாட்டேன் இல்லன்னா எனக்கு பேய் கனவா வரும் என ஹேமா கூறுகிறார். பேய் நான் உனக்கு பயமா என லட்சுமி கேட்க ஏன் உனக்கு பயம் இல்லையா என ஹேமா திருப்பிக் கேட்கிறார். பேய் என்று ஒன்று இல்லவே இல்லைனு எங்க அம்மா சொல்லி சொல்லி எனக்கு அந்த பயமே போயிடுச்சு என சொல்கிறார். பிறகு இப்ப எங்க இருக்க உனக்கு ஆதார் கார்டு இருக்கா என எல்லாம் கேட்டு லந்து செய்கிறார் லட்சுமி. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.