மீண்டும் பாரதியிடம் வெண்பா சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharathi Kannamma Episode Update 06.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா பாரதி 6 நாள்தான் இங்கேயே இருப்பேன் என சொன்னார். இன்னைக்குதான் அந்த ஆறாவது நாள் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை என யோசித்துக் கொண்டிருக்கிறார். அதன்பின்னர் பாரதிக்கு தோசை ஊற்றி கொடுக்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் பக்கம் கண்ணம்மா ஏதோ சிந்தனையில் இருக்க அந்த நேரத்தில் பாரதி சட்னியை ஊற்றுமாறு கூறுகிறார். பிறகு கண்ணம்மா சட்னியை தெரியாமல் பாரதி மீது கொட்டி விடுகிறார். இதனால் முதலில் பாரதி கோவப்பட பின்னர் சாமியார் சொன்னது நினைவுக்கு வர அவர் அப்படியே அமைதியாகி விடுகிறார்.

கண்ணம்மா நானே சண்டைபோட வாய்ப்பு கொடுத்து விட்டேனே என வருத்தப்படுகிறார். பிறகு பார்வதியிடம் மன்னிப்பு கேட்க அவர் பரவாயில்லை என கூறி விடுகிறார். என்னை இவரு சண்டை போடாமல் அமைதியாக இருக்காரு, இவர் இப்படி இருக்க மாட்டாரே இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என கண்ணம்மா யோசிக்கிறார். மீண்டும் கண்ணம்மா மன்னிப்பு கேட்க அதான் பரவாயில்லன்னு சொல்லிட்டனே, இருக்குற சட்னி கீழே கொட்டிட்ட நீ எப்படி சாப்பிடுவ? என கேட்கிறார். நான் பொடி வச்சிருக்கேன் சாப்பிட்டுப்பேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் வெண்பா பாரதி தம்மை அறைந்தது பற்றி சாந்தியிடம் சொல்லி கவலைப்படுகிறார். அந்த கண்ணம்மாவும் எனக்கு ஆட்டம் காட்டுறா. ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன் எனக்கு நேரம் கிடைக்கும் போது வச்சி செய்வேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி சாமியார் சொன்னதை நினைத்து வெண்பா தான் தப்பானவனு இப்போ தெரிய ஆரம்பிச்சுடுச்சு அப்போ கண்ணம்மா உண்மையாகவே நல்லவளா என யோசிக்கிறார். ஒரே குழப்பமாக இருக்கிறது என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதைப்போல் பாரதியின் மாற்றத்தை எண்ணி பயந்து கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அந்த நேரத்தில் வாய்தா வடிவுகரசி வந்து என்ன இன்னைக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு என கேட்கிறார். பிறகு புடவையை எடுத்து பார்த்து அதன் விலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். யாரு உங்க மாமியார் வாங்கி கொடுத்தாங்களா என கேட்க இல்ல எங்க வீட்டுக்கார் வாங்கி கொடுத்தார் என கூறுகிறார். இதனால் ஒரே ஆச்சரியம் அடைகிறார்.

இந்த பக்கம் அகிலன் அஞ்சலியை கடத்திச் சென்றது யார் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவி புட்டேஜ்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த அஞ்சலி அகிலனிடம் எதுக்கு இதையெல்லாம் பார்த்துட்டு இருக்க. இத அப்படியே விடு என சொல்ல அப்படியெல்லாம் விட முடியாது உன்னை எவ்வளவு கஷ்டப் படுத்துனாங்க, உன்ன கடத்தினது யாரு அதுக்கு பின்னாடி யார் இருக்கானு கண்டுபிடிச்சாகணும் என கூறுகிறார். ஒருவழியாக காரை கண்டுபிடித்தார். அதை வைத்து கடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க அகிலன் திட்டமிடுகிறார். கீர்த்தனன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.