பாரதியிடம் வெண்பாவின் முகத்திரை கிழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bharathi Kannamma Episode Update 05.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி தனக்காக கல்யாண நாளுக்கு பிறகு எடுத்து கொடுத்ததை கையில் வைத்துக் கொண்டு பழைய நினைவுகளை பற்றி மனதிற்குள் பேசிக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா. நீங்க பழைய கோவக்காரன் பாரதி மாதிரி இல்லை. உங்களுக்குள்ள நிறைய மாற்றங்கள் இருக்கு என சொல்லிக் கொண்டிருக்கிறார். எட்டு வருஷத்துக்கு பிறகு எனக்கு நீங்க புடவை வாங்கிக் கொடுத்தது பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்கிறார்.
இந்த பக்கம் ஹேமாவும் லட்சுமியும் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது ஹேமா தவறாக எழுதி விட்டதாக எண்ணி எரேசரை தேடுகிறார். அவருடைய ஜாமென்ட்ரி பாக்ஸில் இல்லாததால் லட்சுமியிடம் நீ எடுத்தியா என கேட்கிறார். லட்சுமி நான் எடுக்கலை என சொல்லியும் நம்பாதே ஹேமா நீதான் எடுத்து இருக்கணும் என சொல்லி அவருடைய பேக்கை சோதனை செய்கிறார். இதனால் கடுப்பான லட்சுமி இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நீ என்னை திருடினு சொல்றியா என கோபப்பட்டு பேகை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.
கீழே அகிலனின் சௌந்தர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் லட்சுமி வந்து நான் எங்க வீட்டுக்கு போறேன் நீங்க யாரும் என்னை கூட்டிட்டு போய் விட வேண்டியதில்லை. நானே தனியா போகிறேன் என சொல்கிறார். நான் ரப்பரை எடுக்கலாம் என்று சொல்லியும் அதை நம்பாமல் இவை என்ன திருடி என்று என்னுடைய பேக்கை சோதனை செய்கிறார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் இனிமே இங்க இருக்க மாட்டேன் என கூறுகிறார். பிறகு அஞ்சலி நான்தான் இரப்பரை எடுத்தேன் என்று சொல்ல பிறகு ஹேமா லட்சுமியிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு இருவரும் ஒருவழியாக சமாதானமாகி மேலே செல்கின்றனர்.
ஒரு ரப்பர் விஷயம் எவ்வளவு பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தி விட்டது என அகிலன் சொல்ல லட்சுமியை பார்க்கும்போது எனக்கு கண்ணம்மாவை பார்த்தது போலவே இருந்ததாக கூறுகிறார். செய்யாத தப்பை ஒத்துக் கொள்ளக் கூடாது என கண்ணம்மா சொன்னதுபோலவே லட்சுமி சொல்வதாக கூறுகிறார்.
இந்தப் பக்கம் பாரதி போனில் பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒரு சாமியார் வந்து பசிக்குது சாப்பிட பணம் கிடைக்குமா என கேட்கிறார். பாரதி 500 ரூபாயை எடுத்துக் கொடுக்க அஞ்சு பத்துன்னு கொடுக்கிற இந்த காலத்துல நீங்க 500 ரூபாய் கொடுத்து இருக்கீங்க எனக்கு எதுக்கு தம்பி எவ்வளவு பணம் என கூறுகிறார். பரவாயில்ல வெச்சுக்கங்க வயசுல என்ன விட பெரியவர் அதனாலதான் கொடுத்தேன் என பாரதி சொல்ல அதன் பிறகு நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா என கூறுகிறார். ஜோசியம் சொல்ல பாருங்க எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என பாரதி சொல்ல ஜோசியம் இல்ல தம்பி சொல்லனும்னு தோணுது சொல்கிறேன் என கூறுகிறார்.
அதன் பிறகு உங்க வாழ்க்கையில நீங்க நல்லவங்க நினைச்சுட்டு இருக்காங்க நல்லவங்க இல்லை கெட்டவங்கனு நினைச்சிட்டு இருக்கவங்க தான் நல்லவங்க என கூறுகிறார். பாரதி எனக்கு புரியல என கேட்க போகப் போக உங்களுக்கு எல்லாம் தெரிய வரும் டாக்டர் தம்பி என சொல்கிறார். நான் டாக்டர் உங்களுக்கு எப்படி தெரியும் என பாரதி கேட்க அவர் சிரித்து விட்டு எனக்கு எல்லாமே தெரியும் என கூறுகிறார். அந்த சாமியார் சொன்ன வார்த்தைகளை நினைத்து பாரதி சிந்தனையில் இருக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.