கண்ணம்மா சொன்ன உண்மையை கேட்டு பாரதியை அவரது குடும்பம் பாராட்டியுள்ளது.
Bharathi Kannamma Episode Update 04.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி தனக்கு பிரசவம் பார்த்த உண்மையை கூறியதும் மகிழ்ச்சி அடைந்த கண்ணம்மா தன்னுடைய மாமியார் சௌந்தர்யாவை கோவிலுக்கு அவர் சொல்கிறார். கோவிலில் இருவரும் சந்தித்துக் கொள்ள அப்போது கண்ணம்மா பாரதி பற்றி மரியாதையாகப் பேசி அவரை பற்றி விசாரிக்க சௌந்தர்யா ஆச்சரியமடைந்தார். நீ அவனை இவ்ளோ மரியாதையா எல்லாம் பேச மாட்டியா என்ன ஆச்சு என கேட்கிறார்.
பண்டிகை விடுமுறை :பயணிகள் கவனிக்கவும்
வரும்போது அவரை பார்த்துவிட்டு தான் வருகிறேன் அவரிடம் பேசினேன். என்னுடைய இரட்டை குழந்தை பற்றி கேட்டேன். அப்போது அவர் ஒரு உண்மையை சொன்னார். எனக்கு பிரசவம் பார்த்தது யார் தெரியுமா? உங்க பையன் பாரதிதான். என் கொள்கயை முதன் முதலாக தொட்டு அவர்தான் என கண்ணம்மா கூறுகிறார். அவர் செய்த உதவி ரொம்ப பெருசு. அவர் மேல் எனக்கு மரியாதை அதிகமாயிடுச்சு என கூறுகிறார். இருந்தாலும் என்னுடைய இரண்டாவது குழந்தையை தேடி கண்டு பிடிக்காமல் ஓய மாட்டேன். எனக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை. என்னுடைய குழந்தையை நான் கண்டுபிடித்துக் கொள்கிறேன் என கூறுகிறார்.
வீட்டிற்கு வந்த சௌந்தர்யா பாரதியிடம் இதைப் பற்றி கேட்க உங்களுக்கு யார் சொன்னது. மேடமால இத ஒருநாள்கூட மனசுல வச்சு இருக்க முடியாதா? உங்க பையனுக்கு எப்படி பிரசவம் பார்க்கலாம் என வந்து குதிச்சாலா? எனக் கேட்க சௌந்தர்யா அவ அப்படி எல்லாம் பேசல உன் மேல மரியாதை இருக்கு. வாழ்நாள் முழுதும் உனக்கு நன்றி கடன் பட்டு இருக்கேன். அவருக்கு நன்றி சொல்லும் என்று சொன்னார் என கூறுகிறார். நான் ரொம்ப சந்தோஷம் என்று சொன்னேன் சொல்லுங்க என பாரதி கூறுகிறார். அதன்பின்னர் சௌந்தர்யா பாரதியை கட்டியணைத்து கிரேட் என பாராட்டுகிறார்.
விஜய்சேதிபதியை புகழ்ந்து தள்ளிய Bhagyaraj – வைரலாகும் வீடியோ
அதன் பின்னர் சௌந்தர்யாவின் கணவர் தன்னுடைய மகனை கட்டி அணைத்து பாராட்டுகிறார். முதல்முறையா நீ பிறந்து உன்னை ஒரு கையில் வாங்கியபோது சந்தோஷப்பட்டேன். அதன்பிறகு நீ டாக்டர் பட்டம் வாங்கியபோது சந்தோஷப்பட்டேன். இப்போ அதைவிட ரொம்ப சந்தோஷப்பட்டு உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என கண்ணீர் விட்டார்.
அகிலனும் பாரதியை கட்டியணைத்து பாராட்டினார். அதன் பின்னர் பாரதி உள்ளே செல்ல சௌந்தர்யா இதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.