ஜவுளி கடைக்கு போன இடத்தில் நீதிபதியிடம் வசமாக சிக்கியுள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 03.12.22 : பாரதியை ஒரு வழியாக சமாதானம் செய்து கடைக்கு அழைத்துச் சென்றார் சௌந்தர்யா. அங்கு அகிலனும் வந்து விட அனைவரும் சேர்ந்து கடைக்குள் செல்கின்றனர். கடைக்காரர் நலம் விசாரிக்க தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த நேரத்தில் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி அந்த கடையில் இவர்களை பார்க்க நேரில் வந்து விசாரிக்கிறார். பிறகு சௌந்தர்யா பாரதி கண்ணம்மா திருமண நாள் வருகிறது, அதனால் துணி எடுக்க வந்தோம் என கூறுகிறார்.

Ajith இருந்தாலே அது Mass தான் – Valimai Trailer Public Reaction..! | Tamil | H.Vinoth | Boney Kapoor

ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சாத்துவது ஏன் தெரியுமா?

பிறகு அனைவரும் துணி எடுக்க உள்ளே செல்ல பாரதிக்கு வெண்பா தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு பாரதி வெளியே வந்து போன் பேச வெண்பாவை திட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் நீதிபதி வந்து விடுகிறார். அதன்பிறகு நீங்க யாரிடம் பேசிட்டு இருக்கீங்க என சொல்ல தேவையில்லாத கால் என பாரதி சொல்கிறார்.

சரி உள்ள போய்ட்டு கண்ணம்மாவுக்கு நீங்கள் துணி எடுத்து கொடுங்க என கூறுகிறார். சரி என பாரதி உள்ளே சென்று புடவை எடுத்து கொடுக்கிறார். அதன்பிறகு விலை குறைவாக இருப்பதால் சௌந்தர்யா வேறொரு புடவையை எடுத்து கொடுக்குமாறு சொல்கிறார். பிறகு நீதிபதி சரி நீங்க பார்த்துட்டு இருங்க என கூறுகிறார்.

பிறகு ஒரு வழியாக ஒரு புடவையை எடுத்து கொடுக்கிறார். அதன் பிறகு கண்ணம்மா பாரதிக்கு நான் டிரஸ் எடுத்து தரேன் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.