கண்ணம்மாவுக்கு பாரதி செய்த உதவியை நேரில் பார்த்து வயிறு எறிந்துள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 01.11.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது தனியாக சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் அண்ணா கண்ணம்மாவிடம் என்னமா ரொம்ப சந்தோஷமா இருக்க என்ன விஷயம் என்ன ஏது என கேட்கிறார். நானெல்லாம் ரெண்டு நாளைக்கு சந்தோஷமா இருந்தா அந்த கடவுளே வந்து கலைத்து விடுவார். கிடைக்கிற நேரத்துல சந்தோஷமா இருந்துகிறேன் என கூறினார்.

ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு

அதன்பிறகு திடீரென இவர்களது ஆட்டோ பழுதாகி விடுகிறது. ஆட்டோவை சாய்த்தவாறு தூக்கிப் பிடித்தால் தான் டயரை மாற்ற முடியும் என்பதால் ஆட்டோ டிரைவர் அண்ணா பலரிடம் உதவி கேட்கிறார். ஆனால் யாரும் முன்வராத காரணத்தினால் கண்ணம்மா நானே தூக்கிப் பிடிக்கிறேன் என டிரைவருக்கு உதவுகிறார்.

இந்தப் பக்கம் பாரதி ஹேமாவை ஸ்கூலுக்கு காரில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் போது மனிதாபிமானம் என்றால் என்ன என ஹேமா கேட்கிறார். அதற்கு பாரதி ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கும் போது யாராவது அடிபட்டு இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள் பறவைகள் என எதற்கு உதவி தேவைப்பட்டாலும் உடனே தயங்காமல் உதவ வேண்டும் அதுதான் மனிதாபிமானம் என கூறுகிறார்.

இப்படி இருவரும் காரில் பேசிக் கொண்டு செல்லும்போது திடீரென காரை நிறுத்தச் சொல்கிறார். பாரதி காரை நிறுத்தியதும் அங்க பாருங்க சமையல் அம்மா என காரை விட்டு இறங்கி கண்ணம்மாவிடம் ஓடி வருகிறார். பிறகு கண்ணம்மா ஹேமாவிடம் பேசிவிட்டு உங்க அப்பாவை கொஞ்சம் வர சொல்றியா உதவி செய்ய சொல்லி கேட்கிறார். உடனே உமா பாரதியிடம் சென்று நாம மனிதாபிமானத்தை காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு தன்னுடைய அப்பாவை அழைத்து வருகிறார்.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha

பாரதியும் வந்து ஆட்டோவின் டயரை மாற்ற உதவி செய்கிறார். அப்போது கண்ணம்மா வேண்டுமென்றே பாரதியின் கை மேல் கைவைப்பது போன்ற சேட்டைகளை செய்கிறார். இது எல்லாம் வெண்பா பார்த்தா நல்லா இருக்கும் என அவருக்கு லொகேஷன் அனுப்ப அவரும் வந்து சேருகிறார். இருவரும் இப்படி நெருக்கமாக இருப்பதைப் பார்த்து வயிறு எரிகிறார் வெண்பா. இது எல்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது உடனே இதைத் தடுத்து நிறுத்தணும் என வெண்பா காலை முன்னெடுத்து வைத்து அவரை தடுத்து நிறுத்துகிறார் துளசி.

பிறகு வெண்பா துளசியிடம் உனக்கு என்ன வேணும் என கேட்க எனக்கு ஒன்னும் வேணா, உங்களுக்கு தான் பாரதி சார் வேணும்னு தெரியும் என கூறுகிறார். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறாங்க சேர்ந்து வாழவே தொடங்கிட்டாங்க என கூறுகிறார். இனிமே அவங்க கிட்ட உன்னோட சூழ்ச்சி எல்லாம் செல்லாது என துளசி சொல்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் இதெல்லாம் பார்த்துட்டு போறீங்களா என துளசி சொல்ல உடனே வெண்பா அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு ஆட்டோவும் சரி செய்யப்பட்டு விடுகிறது.

வீட்டிற்கு வந்த கண்ணம்மா மகிழ்ச்சியாக இருக்க அந்த நேரத்தில் போட்டோ ரெடி ஆகிவிட்டது என போட்டோகிராபர் போட்டோக்களை கொடுக்கிறார். அதனை பார்த்து ரசித்த கண்ணம்மா வீட்டில் மாட்டுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.