வெண்பாவின் சதியால் கண்ணம்மாவை கண்டபடி திட்டி உள்ளார் சௌந்தர்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வெண்பா காலை வைத்து தடுக்க கண்ணம்மா நிலை தடுமாறி டேபிள் என் மீது விழுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து நொறுங்குகிறது.

உடனே கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சாரி கேட்க வெண்பா அத்தை முதல் மாச சம்பளத்தை அவங்க கையாள கொடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க ஆனால் நீ இப்படி பண்ணிட்ட என கண்டபடி திட்ட சௌந்தர்யாவும் உனக்கு எப்பவும் பதட்டம் தானா என திட்டி வெளியே போக சொல்கிறார். அடுத்து வீட்டுக்கு வந்த கண்ணம்மா அப்பாவிடம் சம்பளத்தை கொடுக்க உன்னுடைய சம்பளத்தில் பாதி தான் இங்கு இருக்கு மீதி எங்கே என கேட்க அம்மாவுக்காக செலவு செய்து விட்டதாக சொல்லி வீல் சார் ஒன்றை எடுத்து வந்து காட்ட சண்முக வாத்தியார் சந்தோஷப்படுகிறார்.

அதற்கு அடுத்ததாக கோவிலில் பரிகார பூஜைக்காக சாந்தியை அழைத்துச் சென்றிருக்க சௌந்தர்யாவும் பாரதி மற்றும் தண்டபாணியுடன் கோவிலுக்கு வருகிறார். பிறகு சௌந்தர்யா சாந்தியை ஆசீர்வாதம் செய்ய காத்திருக்க தண்டபாணி மாலை வாங்குவதற்காக சென்று மாலை வாங்கி வருகிறார்.

பிறகு பூசாரி பூஜை செய்து மாலையை கொடுக்கும்போது பாரதி வாங்கிய மாலை அவனது கைக்கு வந்து சேர தண்டபாணி சொன்ன டெஸ்ட் பெய்லியர் ஆகிவிட்டது என சொல்லி அவரை அழைத்துச் சென்று அடி உதைக்கிறார். இந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த குழந்தைகள் பாரதியின் கையில் இருந்த மாலையை தட்டி விட அது பறந்து சென்று கோவிலை சுற்றி வந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவின் கழுத்தில் விழுகிறது.

இதைப் பார்த்து பாரதி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.