கண்ணம்மா ஜெயிலில் இருக்க பணக்கார பாரதி ஊதாரியாக ஊர் சுற்றுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னவாக்கம் என்ற ஒரு ஊரில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் பாரதி. பணக்கார குடும்பத்தைச் சார்ந்த பாரதி அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொள்ளாமல் ஊதாரியாக ஊர் சுற்றி வருகிறார்.

இன்று 25வது பிறந்தநாள் கொண்டாடும் பாரதிக்கு வாழ்த்து சொல்ல தொழிலதிபர்கள், ஊர் பெரிய மனுஷங்கள், பொதுமக்கள் என எல்லோரும் காத்துக் கொண்டிருக்க பாரதி ரூமில் ஹாய் ஆக ரெடியாகிக் கொண்டிருக்க அங்கு வரும் அவனது அத்தை மகன் விஜய் பெரிய மனுஷங்க நிறைய பேர் இருக்காங்க கூட்டத்தை பார்த்ததும் தடுமாறுவேன் அதனால இந்த சரக்கடி என சரக்கு ஊற்றி கொடுக்க பாரதியும் குடிக்கிறார்.

குடித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு பாரதி கீழே வர அத்தையிடம் (வில்லி) ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க அவர் இன்னைக்கும் குடிச்சிருக்கியா என கேட்க சத்தம் போட்டு எல்லாருக்கும் தெரியப்படுத்தாதீங்க என சொல்லிவிட்டு எல்லோரிடமும் கை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு ஊர் மக்களை சந்தித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு எல்லோரும் சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்லி கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்.

இந்த பக்கம் பாரதிக்கு நல்ல மனசு இருந்தும் இப்படி சேரக்கூடாத உங்களோட சேர்ந்து ஊதாரியா சுத்திக்கிட்டு இருக்கானே என அம்மா வருத்தப்பட உதவியாளர் ஒருவர் கல்யாணத்தை பண்ணி வச்சா எல்லாம் சரியா போயிடும் என சொல்ல நானும் அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன் என பாரதியின் அம்மா சொல்கிறார்.

பாரதியின் அம்மா பாரதிக்கு மனைவியாக போவது யாரோ எங்கிருக்காளோ என யோசிக்க அப்படியே ஜெயிலில் சித்ரா என்ற பெயரில் கண்ணம்மா காட்டப்படுகிறார். இன்னைக்கு உனக்கு ரிலீஸ் என சித்ராவை வெளியே அழைத்து வர அப்போது அவளுக்கு எதிரே வரும் தனம் என்ற பெண் நீ சந்தோஷமா வெளியே போற என்னை நிரந்தரமா ஜெயிலுக்குள்ள வச்சுட்ட என கோபப்படுகிறார்.

இந்த தனம் என்ற பெண்மணி ஜெயிலுக்குள் கஞ்சா விற்றதால் வாழ்க்கை முழுவதும் ஜெயில் தண்டனை என்பது தெரிய வருகிறது. பிறகு வார்டன் ஒருவரிடம் அவளை வெளியில் போட்டு தள்ள ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். இன்னைக்கு நைட்டு அவ கதையை முடிச்சிடுவாங்க என தனம் சொல்வதோடு இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.