செம்பருத்தி சீரியல் கேமராமேன் அன்பு என்பவர் ஒருவர் மரணம் அடைந்திருப்பது குறித்து நடிகை பரத நாயுடு கண்ணீருடன் கூறியுள்ளார்.
Bharadha Naidu Emotional Video : தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி.
இந்த சீரியலில் சபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் வில்லியாக பரதா நாயுடு நடித்து வருகிறார்.
தற்போது பரத நாயுடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் செம்பருத்தி சீரியலில் கேமராமேனாக பணியாற்றி வரும் அன்பு என்பவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
செம்பருத்தி சீரியலில் பெரிய பாலிடிக்ஸ் நடக்கிறது. இதனால் நான் தனிமையில் தான் இருந்து வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் இயக்குனர், கேமராமேன் அன்பு ஆகியோர் தான்.
சில நாட்களுக்கு முன்னர் தான் அவருடன் பேசினேன். தற்போது அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்தது என கண்ணீருடன் கதறி அழுது பேசி உள்ளார்.
இவர் டிஆர்பி யில் நம்பர் ஒன்னில் இருக்கும் செம்பருத்தி சீரியலில் பாலிடிக்ஸ் இருப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.