ஹீரோ திரைப்படம் அப்பட்ட காப்பி என அதிர்ச்சிகர அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாக்யராஜ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஹீரோ.
இரும்புத்திரை மூலம் அழுத்தமாக தடம் பதித்த மித்ரன் இயக்கத்தில் இப்படம் உருவானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆனால் தற்போது எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோ திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை வேறொருவரின் கதையுடன் ஒன்றி போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 இயக்குனர்கள் கொண்ட குழு இரண்டு கதையும் ஒப்பிட்டு 18 பேரும் மாற்று கருத்து இல்லாமல் இரண்டும் ஒரே கதை தான் என குறிப்பிட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மித்ரனை அழைத்து வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் இந்த கதை திருட்டு விவகாரத்திற்கு செவி சாய்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அறிக்கையால் சிவகார்திகேயனும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.