பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ரேகா.
Bhagyalakshmi Serial Update 08.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான டிவியில் பாக்கியலட்சுமி. மதர்ஸ் டே கொண்டாட்டத்திற்காக இனியா தன் அம்மாவை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நிலையில் பாக்கியா முதல் போட்டியில் சமையலை செய்ததால் கடுப்பாகிறார் இனியா.
பள்ளியின் முதல் மார்க் மற்றும் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக அவர்களின் திறமைகளை அறிந்து மார்க் போட்டு வருகின்றனர். பாக்யா சமயம் செய்ததைப் பற்றி சமையல் செய்வதற்கு தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி குறித்தும் பேசுகிறார். அதன் பின்னர் எல்லாம் ஓகேவா என இனியாவிடம் கேட்க கோபத்தோடு நீ முதல் ரவுண்டுலேயே தேர்வாக மாட்ட என கூறுகிறார். சரி வா யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என பார்க்கலாம் என்று பாக்கியா கூற போமா என்று கூறி விட்டு தனியாக சென்று விடுகிறார் இனியா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதல் ரவுண்டில் இறுதி ஆளாக பாக்கியா பெயர் அறிவிக்கப்படுகிறது.
எனக்கு ஒரு பயம் இருந்தது! – Music Director Ghibran Speech At JANGO Audio Launch
அதன் பின்னர் மேடையேறிய பாக்கியா ரேகாவை பார்த்ததும் வணக்கம் கூறி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க படங்கள் எல்லாத்தையும் பார்த்து இருக்கிறேன் என கூறுகிறார்.
இதனையடுத்து 10 பேருக்குமான போட்டி ஆரம்பமாகிறது. ஒவ்வொருவராக அழைக்கப்படுகின்றனர். அவரவர்கள் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்பின்னர் பாக்கியாவை அழைக்கின்றனர்.
மைக்கை வாங்கிக் கொண்டு முன்னே வந்த பாக்கியாவிடம் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என ரேகா கேட்கிறார். ஆனால் என்ன சொல்வது என தெரியாமல் பாக்கியா அமைதியாக நிற்கிறார். இதனை பார்த்த இனியாவின் தோழி உங்க அம்மா என்னடி இப்படி பயப்படுறீங்க என கேட்கிறார்.