நட்ட நடு ராத்திரியில் பாக்கியா செய்த வேலையும் கோபி கொடுத்த ரியாக்சனும் தான் இன்றைய எபிசோட் ஹைலட்.

Bhagyalakshmi Serial Update 04.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ராதிகாவை கடைக்கு அழைத்துச் சென்று ஒரு புடவை வாங்கித் தர அந்த புடவையை காதிலேயே மறந்து விட்டுச் சென்று விடுகிறார் ராதிகா.

அது பாக்யாவின் கண்ணில் பட்டு புடவை குறித்து கோபியுடன் கேட்க இது உனக்குத்தான் பாக்கியமே சமாளித்து இந்த புடவையை அவரிடம் கொடுத்து விடுகிறார். பின்னர் அதே கடைக்கு சென்று வேறொரு புடவையை வாங்கி கொண்டு ராதிகாவிடம் கொடுக்கிறார் கோபி. நம்ப வாங்கினது இந்த புடவை இல்லை என ராதிகா கூற இது தான் அந்த புடவை. லைட் வெளிச்சத்துல உனக்கு கலர் மாறின மாதிரி தெரியும் என கூறி சமாளித்து விடுகிறார்.

14 ரன் வித்தியாசத்துல, இலங்கை வெற்றி : ஆடுகள விவரம்..

பின்னர் பாக்கியா இரவு 10 மணிக்கு அந்த புடவையை கட்டிக்கொண்டு கோபி மாறிச் சென்று நிற்கிறார். கண்டும் காணாமல் இருக்கும் கோபி அதன் பிறகு என்ன பாக்கியா ஏதாவது பேசலாம் என கேட்கிறார். புடவை எப்படி இருக்கு என்ன பாக்கியா கேட்க ராத்திரி நேரத்துல கட்டணுன என கோபி கேட்கிறார். கட்டி உங்ககிட்ட காட்டணும்னு தோணிச்சு அதான் கட்டிணேன் என பாக்யா கூறுகிறார். பின்னர் கோபி நல்லா இருக்கு என கூற அதை நினைத்து சந்தோஷப்படுகிறார்.

விஜய்சேதுபதி சொன்னா உலகமே கேட்க்கும்! – Director RK Selvamani Speech | Laabam Press Meet

இன்னொருபுறம் எழிலுக்கு அமிர்தா போன் செய்து பேசுகிறார். அமிர்தாவுடன் மகிழ்ச்சியாக எழில் பேசிக்கொண்டிருக்க அப்போது அவருடைய தங்கச்சி இனியா வந்துவிடுகிறார். யாரு என்னன்னு இனியா கேட்க அமிர்தா அக்கா என கூறுகிறார். உனக்கும் அமிர்தா அக்கா வா என இனியா நக்கல் அடிக்கிறார். ஆனா இப்போலாம் அந்த அக்காகிட்ட நீ அடிக்கடி அதிகமா பேசுற மாதிரி இருக்கு என்ன விஷயம் எனக் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறி இனியாவை போய் தூங்க சொல்கிறார்.

இரவு கோபி புடவை நல்லா இருக்கு எனது சொன்னதைக் கேட்டு பாக்கியா நினைத்து பார்த்து கிச்சனிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார். சிரிப்பதை பார்த்து அனைவரும் என்ன ஏது என கேட்க அது வேற விஷயம் என கூறி விடுகிறார்.

பின்னர் இனியா எங்க ஸ்கூல்ல மதர்ஸ் டே கொண்டாடுறாங்க அதுக்கு நீ கண்டிப்பா வரணும்மா என கூறுகிறார். நான் வரல என பாக்யா சொல்கிறார். அங்க போனா டான்ஸ் ஆடணும் பாடணும் என பாக்யா சொல்ல உனக்கு சமைக்க மட்டும்தான் தெரியும் வேற ஒரு புண்ணாக்கும் தெரியாது என அவருடைய மாமியார் திட்டுகிறார்.

எழில் உனக்கு தான் நல்ல பாட வருமே நீ போய் பாடுமா என்ன சொல்கிறார். சின்ன வயசுல நான் டான்ஸ் கத்திகிட்டேன் என பாக்யா சொல்கிறார். அப்படிப் போய் டான்ஸ் ஆடுமா என எழில் சொல்கிறார். பாக்யாவை கிண்டலடித்து அவருடைய ஆசை கொண்டிரு என்ன கிண்டல் பண்ணா இந்த பாட்டிக்கு அதிகமாக சிரிப்பு வரும் என சோகத்தோடு கூறுகிறார் பாக்யா. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.