ஜெனியின் கர்ப்பத்தை டாக்டர் கன்பார்ம் செய்த நிலையில் செழியன் அதிர்ச்சி முடியும் ஒன்றை எடுக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhagyalakshmi Serial Episode Update 14.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி நேற்று வாந்தி எடுத்து வைக்க இருப்பதாக கூறினார். பிரக்னன்சி டெஸ்ட் கிட் வைத்து சோதித்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. செழியன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என கூறி வந்தார்.

சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

ஆனால் பாக்கியா தொடர்ந்து என்ன ஏது என துருவித் துருவிக் கேள்வி கேட்டதில் ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதாக அனைவரிடமும் கூறி விட்டார். இதனை அடுத்து பாக்கியா மருத்துவமனைக்கு தானும் வருவதாக கூறினார். ஜெனி செழியன் குழந்தை வேண்டாம் என கூறியதால் மிகுந்த யோசனையில் இருக்கிறார். பாக்கியம் என்றும் என்ன எது எனக் கேட்க நடந்ததை ஜெனி கூறுகிறார். அதெல்லாம் டாக்டர் கன்ஃபார்ம் பண்ணுகிறேன் சந்தோஷமாய் இருப்பான் என பாக்கியா ஆறுதல் கூறுகிறார்.

இதற்கிடையில் கோபி ராதிகா வீட்டில் ராதிகா மகளுடன் விளையாடி கொண்டிருந்தார். கார் லோன் விஷயமாக ராதிகா யாரிடமும் பேசுவதைக் கேட்டு எவ்வளவு பணம் வேண்டும் என விசாரித்தார். நான்கு அல்லது ஐந்து லட்சம் தேவைப்படும் என ராதிகா சொன்னதையடுத்து அந்த பணத்தை நான் தருகிறேன் என கோபி கூறுகிறார்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar!

பின்னர் செழியன், ஜெனி மற்றும் பாக்கிய என மூவரும் மருத்துவமனைக்குச் சென்று செக்கப் செய்கின்றனர். டாக்டர் ஜெனி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறார். இதனால் பாக்கியாவும் ஜெனியும் மகிழ்ச்சி அடைய செழியன் அதிர்ச்சி அடைகிறார்‌. செழியன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் கலைத்து விடலாம் என கூறுவதற்கும் வாய்ப்புள்ளது. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.