ஜெனி கர்வம் ஆகியுள்ள நிலையில் செழியன் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளார்.

Bhagyalakshmi Serial Episode Update 13.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி உண்டாகி இருப்பதால் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார். பாக்கியா வந்து என்ன ஆச்சு என கேட்டதும் ஃபுட் பாய்சன் என இருவரும் சமாளித்து விட்டனர். அதன் பின்னர் செழியன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என கூறிவிட்டார்.

ஜாம்பவான் ஜோகோவிச்சை அதிரடியாக வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் டேனில்

ராதிகா வீட்டிற்கு சென்று உணவு கொடுத்த போது அங்கு கோபி வாங்கி கொடுத்த புடவை இருந்தது. என்னிடமும் இப்படி இரு புடவை இருக்கிறது என்னுடைய வீட்டு கார் வாங்கி கொடுத்தார் என பாக்கியா மகிழ்ச்சியாக கூறுகிறார். அந்தப் புடவையில் போட்டோவை ராதிகாவிடம் காட்டியதும் ராதிகா ஷாக்காகி இதே புடவை தான் நான் எடுத்தேன். ஆனால் வீட்டுக்கு வந்து கலர் மாறிடுச்சு என கூறுகிறார். எனக்கு தெரிஞ்சு கடைக்காரன் மாத்தி கொடுத்திருப்பான் என நினைக்கிறேன் என்று கூறினார்.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet

செல்வி எனக்கு என்னவோ சார் மேல தான் சந்தேகமா இருக்கு என கூற பாக்கியா செல்வியை திட்டி விடுகிறார். பின்னர் ஜெனியை பார்க்க மேலே செல்கிறார். அப்போது செழியன் வேறொரு மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி இருப்பதாக கூறுகிறார். நம்மளோட பேமிலி டாக்டர் கிட்டயே போலாமே என பாக்கியா கூறுகிறார்.

பின்னர் இருவரும் ஏதோ மறைப்பதை அறிந்து கொண்ட பாக்கியா என்ன ஏது என துருவித்துருவி கேள்வி கேட்கிறார். இதனால் ஜெனி நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்ற உண்மையை கூறிவிடுகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாக்கியா உடனே ஜெனியை கூறியே அழைத்துச் சென்று அவருடைய மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் சந்தோஷப்பட்டு ஜெனிக்கு சர்க்கரை ஊட்டி விடுகின்றனர். ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாம் என பாக்கியா கூற செழியன் நான் கூட்டிட்டு போறேன் என கூற பாக்கியா அவரை திட்டி விடுகிறார். ‌‌‌

ஜெனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் சொன்னதால் கோபமான செழியன் மேலே செல்ல பின்னாடியே ஜெனியும் செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.