Bhagyalakshmi Serial Episode Update 10.09.21

பாக்கியாவால் கண் கலங்கி அழுதுள்ளார் நடிகை ரேகா.

Bhagyalakshmi Serial Episode Update 10.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியா பள்ளியில் நடந்த மதர்ஸ் டே கொண்டாட்டத்திற்காக சென்ற பாக்கியலட்சுமி இரண்டு டவுண்டிலும் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் அம்மா பற்றி பேசி அனைவரையும் அசர வைத்தார்.

ஐபிஎல் மேட்சில் சிறப்பு..ஆதலால், அஸ்வினுக்கு வந்தது நல்ல வாய்ப்பு..

இதனையடுத்து அவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதோடு சிறந்த அம்மா 2021 என்ற விருதும் அவருக்கு தான் கிடைத்தது. பாக்கியலட்சுமி அம்மா குறித்து பேசியவை தனக்கு மிகவும் பிடித்ததாக அவர் சொன்னது அனைத்தும் சரி, எங்க அம்மாவும் இப்படி தான் என கண் கலங்கினார். பாக்கியா மாதிரி அம்மா கிடைக்க நீ ரொம்ப லக்கி என இனியாவை பாராட்டினார்.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

அதோடு பாக்கியாவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டார் ரேகா. வீட்டுக்கு வந்த இனியா பாக்கியலட்சுமி வெற்றி பெற்றதை பற்றி பெருமையாக பேசி சந்தோஷப்பட்டார். கோபியும் பாக்கியலட்சுமி வாங்கிய பரிசையும் விருதையும் பார்த்து பாராட்டினார்.

இரவு நேரத்திலும் தான் வாங்கிய விருதை பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டார் பாக்கியலட்சுமி. மறுநாள் காலை செல்வி இது குறித்து கேட்டதும் அவரிடமும் கூறி சந்தோஷப்படுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.