நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கதிரவன் மூன்று லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரத்துடன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி, அமுதவாணன், கதிரவன் என ஆறு பேர் மட்டுமே இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் பணப்பெட்டியை உள்ளே அனுப்பி போட்டியாளர்களுக்கு டீல் ஒன்றை கொடுத்தார். இந்த நிலையில் கதிரவன் பிக் பாஸ் கொடுத்த டீலை ஏற்று மூன்று லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த மூன்று லட்சம் பணம் மட்டுமல்லாமல் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கதிரவன் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் என மொத்தம் 20 லட்சத்துடன் சேர்த்து 23 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
கதிரவன் மூன்று லட்சத்துடன் வெளியேறியது சரி தவறு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.